நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார பயணமாகஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டஉள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக  நடைபெற உள்ளது … Read more

கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!

சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதனால், , கடந்த சில மாதங்களாக  எடப்பாடியின் நிகழ்ச்சியை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 5ந்தேதி) செய்தியளார்களிடம் பேசிய  செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை … Read more

ஆச்சர்யமான ‘அழகன்’

1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. கமலை சிறுவனாக 1962-ல் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன்தான் மம்முட்டியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் சிறிய வேடத்தில்.. அதே கமலஹாசன் ஏராளமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக உயர்ந்து 1987இல் நாயகன் என்ற பிரம்மாண்டமான படத்தின் மூலம் நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு தாவிய போதுதான், நியூடெல்லி … Read more

மகிழ்ச்சி ! அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன்…

ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என  மூத்தமற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.  இதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more

திமுக கூட்டணிக் கட்சி என்றால் ரவுடித்தனத்தில் ஈடுபடலாமா? அண்ணாமலை

சென்னை: திமுக கூட்டணிக் கட்சி என்றால் டிஜிபி அலுவலக வாயிலில் ரவுடித்தனத்தில் ஈடுபடலாமா?  ஏர்போர் மூர்த்திமீதான விசிக தாக்குதலை சுட்டிக்காட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,   புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, காவல்துறையினர் கண்முன்னே, விசிக கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில், எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், … Read more

நெல்லையில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை – இரண்டு பள்ளி மாணவர்கள் கைது…

திருநெல்வேலி: நெல்லை ரயில் நிலைய வாசலில்  நள்ளிரவு வாலிபர்  ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை  செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக   இரண்டு பள்ளி மாணவர்களை காவல்துறை செய்துள்ளது. மேலும் சிலரை தேடி வருவதாக கூறப்படுகிறது. நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு … Read more

கூட்டணியைக் கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை! டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கூட்டணியைக் கையாள  பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அதிமுக பாஜக கூட்டணிக்காக, மாநலி தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை கட்சி தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து அண்ணாமலை கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். நயினார் நாகேந்திரன் தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. ஆனால், … Read more

நகை திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது! “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” என எடப்பாடி விமர்சனம்…

சென்னை; நகை திருட்டு வழக்கில், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,   “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” திமுக ஆட்சி நடைபெகிறது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். நகைத் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் … Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:  மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் … Read more

சட்டம் ஒழுங்கு? சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் ஏர்போர்ட் மூர்த்திமீது விசிகவினர் தாக்குதல்! வீடியோ…

சென்னை: டிஜிபி அலுவலகம் வந்த புரட்சி தமிழகம் கட்சி உறுப்பினரும், பிரபல யுடியூபருமான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர்  தாக்குதல் நடத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னையில்  புரட்சி தமிழகம் கட்சிஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி முயற்சித்த சம்பவம்,  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்காக சான்றாக உள்ளது. சென்னையில் பட்டப்பகலில் மதிய நேரத்தில்,   போலீஸ் தலைமை பதவியில்உள்ள சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் இந்த  சம்பவம் அரங்கேறி உள்ளது. … Read more