வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மார்ச் 27 வரை விண்ணப்பிகலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க  மார்ச் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் … Read more

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு – வாக்கு எண்ணிக்கை மே4ந்தேதி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.  தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் ஒரு கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ‘தமிழ்நாட்டில் 243, மேற்கு வங்கத்தில் 294, கேரளாவில் 140, அசாமில் 126 மற்றும்புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை ஒரேந ளான … Read more

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். புனேவில் செயல்படும் CSIR-தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-NCL) விஞ்ஞானிகள், டைய்மெதில் ஈதர் (DME) என்ற எரிபொருளை மெத்தனால் மூலம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு கத்தலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் … Read more

துபாயிலிருந்து வெளியேறுவது கடினமாகுமா? முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க UAE பரிசீலனை

அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள நிலவரம் அதிகளவு பகிரப்படுவதில்லை. இந்த சூழலில், துபாயிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்க முயலும் முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மற்றும் சட்ட வட்டாரங்களின் தகவலின்படி, முதலீட்டை திரும்பப் பெறத் திட்டமிட்டதாக அறிவிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு … Read more

திமுகவுக்காக இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது  பிரசாரத்தை தொடங்குகிறார்,  அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஆளும்  தற்போதைய தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக,  மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை … Read more

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் வசதி மற்றும் அவர்களின் தேவைகாக  உருவாக்கப்பட்ட தே   தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான்.  இந்த சட்டத்தின்மூலம், அரசின் அனைத்து துறையின் நடவடிக்கைகள் குறித்து சாமானிய மக்கள் அறிந்துகொள்ள முடியும்.  மாநிலத்தின் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை … Read more

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

சென்னை; தமிழ்நாட்டில்  பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல்  ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி,  தமிழ்நாட்டில் இன்று 78 சுங்கச்சாவடிகளுக்கு  சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,  ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மாநிலம் … Read more

அதிமுகவில் இணைந்தது ஏன்? காரணத்தை சொல்கிறார் காளியம்மாள்…

சென்னை:  அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை காளியம்மாள் தெரிவித்துள்ளார்.  “அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு என தெளிவுபடுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள்  நிர்வாகியும் ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாள்  நாதகவில் இருந்து விலகி பல மாதங்களாக அமைதியாக இருந்து வந்த நிலையில்,  அவரை  தங்களது கட்சிகளுக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இன்று திடீரென  அதிமுக-வில் இணைந்தார். சுமார் ஓராண்டு கால அரசியல் இடைவெளிக்குப் பிறகு,  இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

இந்தியர்களின் பாதுகாப்பு: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி பதிவு…

டெல்லி: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள மோசமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்போது,  இந்தியர்களின் பாதுகாப்பு,  தடையற்ற எரிசக்தி போக்குவரத்து  குறித்தும்  விவாதித்ததுடன்,  போரை தவிர்க்க, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக,  … Read more

ரத்ததான விதிகளில் மாற்றமில்லை: சில பிரிவினருக்கான தடை தொடரும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீண்டும் பரிசீலிக்க நீதிமன்றம் முன்பு கூறியிருந்ததால், நிபுணர் குழு அதைப் பற்றி மறுபரிசீலனை செய்ததாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தத் தடை அவசியம் என மீண்டும் பரிந்துரைத்ததாகவும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார். முதன்மை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி … Read more