வதந்திகளை நம்ப வேண்டாம் – எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை! தவெக நிர்மல் குமார்

சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை –  வதந்திகளை நம்ப வேண்டாம்  தவெக  துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார்,  கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம்  தகிக்கத் தொடங்கி உள்ளது. இதில், திமுக 23 கட்சிகளுடன் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது.  அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட சில கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில்  நாதக, தவெக தனித்து களமிறங்குகிறது. … Read more

முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாட்டி, வெற்றிக்கோப்பை பெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் ஆட்டமும் போற்றத்தக்காத இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரை … Read more

திமுக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு…

சென்னை: திமுக அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்   அதிமுக அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. திமுக ஆட்சியில்,  தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நேரத்தின்  தமிழ்நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதிக்கிறார். இதை கண்டித்து,  நாளை (மார்ச் 17) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி  விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் … Read more

துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல்! துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது…

சென்னை: துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், சென்னையில் இருந்து துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது.. துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் துபாயில் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவிலிருந்து (சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)   பகுதியில் இருந்து   துபாய் சென்ற  எமிரேட்ஸ் விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (டிஎக்ஸ்பி) அருகே உள்ள எரிபொருள் தொட்டியில் ஆளில்லா விமானம் … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மார்ச் 27 வரை விண்ணப்பிகலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க  மார்ச் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் … Read more

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு – வாக்கு எண்ணிக்கை மே4ந்தேதி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.  தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் ஒரு கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ‘தமிழ்நாட்டில் 243, மேற்கு வங்கத்தில் 294, கேரளாவில் 140, அசாமில் 126 மற்றும்புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை ஒரேந ளான … Read more

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். புனேவில் செயல்படும் CSIR-தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-NCL) விஞ்ஞானிகள், டைய்மெதில் ஈதர் (DME) என்ற எரிபொருளை மெத்தனால் மூலம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு கத்தலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் … Read more

துபாயிலிருந்து வெளியேறுவது கடினமாகுமா? முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க UAE பரிசீலனை

அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள நிலவரம் அதிகளவு பகிரப்படுவதில்லை. இந்த சூழலில், துபாயிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்க முயலும் முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மற்றும் சட்ட வட்டாரங்களின் தகவலின்படி, முதலீட்டை திரும்பப் பெறத் திட்டமிட்டதாக அறிவிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு … Read more

திமுகவுக்காக இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது  பிரசாரத்தை தொடங்குகிறார்,  அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஆளும்  தற்போதைய தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக,  மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை … Read more

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் வசதி மற்றும் அவர்களின் தேவைகாக  உருவாக்கப்பட்ட தே   தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான்.  இந்த சட்டத்தின்மூலம், அரசின் அனைத்து துறையின் நடவடிக்கைகள் குறித்து சாமானிய மக்கள் அறிந்துகொள்ள முடியும்.  மாநிலத்தின் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை … Read more