புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய  முறைப்படி நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி  ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் … Read more

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். … Read more

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது

பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பரிந்துரைகள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் (09) கையளிக்கப்பட்டது. சமயக் கல்வி பாரியளவில் கைவிடப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர். பிரிவெனாக்களை ஆரம்பித்தல், அறநெறிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் … Read more

பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கியிருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் கலாச்சார அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின. புத்தாண்டு விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவால் … Read more

இன்று முதல் (11) நாட்டில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 11 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 10 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று முதல் (11) நாட்டில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் … Read more

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள் – வட மாகாண ஆளுநர்

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.  இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும்.  புனித நோன்பு … Read more

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனம்

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தன்று தலைக்கு எண்ணெய் தடவி தலையில் பூசிக்கொள்ளும் மங்களகரமான சடங்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அது அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

குடிநீர் தொடர்பான தேசிய கொள்கை மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை

சமகால மற்றும் எதிர்கால தேவைகளுக்குப்  பொருத்தமான வகையில் ‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை  மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை’ ஏற்புடைய ஏனைய கொள்கைகளுடன் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து⁹ நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும்  பாதுகாப்பானதும்  தரப்பண்பானதுமான குடிநீருக்கான அணுகலை உறுதிப்படுத்தல்,  பேண்தகு வகையிலான நீர்ப் பாவனையை ஊக்குவித்தல் மற்றும்  நீர்த் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக (08.04.2024) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக முடிந்த அனைத்து நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்கும்

• அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற ‘போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்” நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை … Read more

புத்தாண்டு காலத்தில் பொருட்களை தாமதிமின்றி விநியோகிக்க மத்திய தபால் பரிவர்த்தனை நடவடிக்கை

• ஏப்ரல் 12 ஆம் திகதியும் தபால் சேவை இடம்பெறும் – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார. புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் புத்தாண்டுக் காலத்திலும் எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் இந்த … Read more