இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார்

வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவத் தயார். தலைமைத்துவத்தை வழங்க பின்வாங்க வேண்டாம். கடினமான சந்தர்ப்பங்களில் சவாலை ஏற்று பொறுப்பை நிறைவேற்றுங்கள். இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை … Read more

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு, நாட்டில் தற்போது ஒரு கிலோகிராமுக்கு அறவிடப்படும் 200 ரூபா விசேட வர்த்தக வரி 1 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கு சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப் பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(29) இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உதவி மாவட்ட தெயலாளர் ஜி. பிரணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறித்த திட்டம் தொடர்பான அறிமுகத்தை செரி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் வி. தர்ஷன் வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் … Read more

கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சைகள் மார்ச் 13-14-15 ஆம் திகதிகளில்…

கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (28) புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நேர்முகப்பரீட்சைகளை நடாத்தி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏறக்குறைய 2000 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் … Read more

வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடி விடாது தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு ஏதுவான கார ணிகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியமும் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார். தேசிய கடதாசி சங்கத்தினை 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை கடந்த (20) தேசிய பொருளாதார மற்றும் உள்ளக திட்டமிடல் தொடர்பான மேற்பார்வை குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதே செயற்குழுவின் … Read more

இவ்வருடத்திற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர திட்டம்

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் … Read more

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம் – சிறந்த பெண் தொழில்முனைவோர்களை பாராட்டும் விழாவில் ஜனாதிபதி உரை. நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் … Read more

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் மதத் தலைவர்களுக்கான பரந்த அளவிலான பணியுள்ளது – தேசிய சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மதத் தலைவர்கள் … Read more

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் … Read more

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் தெரிவிக்கின்றனர். இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி … Read more