யுத்தம் இல்லாதொரு நாட்டை உருவாக்கிய தேசியப் பணியை நினைவுகூருவது அனைத்து இனங்களின் பொறுப்பும் கடமையும் ஆகும் – அமைச்சர் பந்துல குணவர்தன

சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தரப்பு மக்களும், நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தி இலங்கையை யுத்தம் அற்ற ஒரு நாடாக மாற்றிய பணியை நினைவுகூருவது அனைத்து இன மக்களினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், எதிர்வரும் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள போர்வீரர்கள் தினத்தை முன்னிட்டு … Read more

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற சிநேகபூர்வ சங்கத்தின் தலைவராக அமைச்சர் நஸீர் அஹமத்

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்றத்தின் புதிய தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற சிநேகபூர்வ சங்கத்தின் 9ஆவது பாராளுமன்றத்திற்கான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (10) இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல மற்றும் எஸ். எம். எம் முஷாரப் ஆகியோர் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாராளுமன்ற … Read more

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு … Read more

இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது – கடற்றொழில் அமைச்சர்

இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம்  (13) சிலாபத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு, குறித்த பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட … Read more

புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல பல்கலைக்கழகக் கட்டமைப்பு தயார் செய்யப்படும்

10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்து அதில் முன்னணி வகியுங்கள் – கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் … Read more

இரண்டு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

ஜப்பான் தேசிய அணியுடனான நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை 4–0 என முன்னிலை பெற்றுள்ளது. சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. இதன்பின்னர் பதிலுக்கு … Read more

பல்துறை அபிவிருத்தி உதவியாளர்களுக்காக தென் மாகாண அரச சேவையின் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பல்துறை அபிவிருத்தி உதவியாளர்கள் 740 பேருக்கு தென் மாகாண அரச சேவையில் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவிக்காக நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நேற்று (14) தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி. டபிள்யு. கமகே தலைமையில் தென் மாகாண பிரதான செயலக அலுவலகத்தின் கேட்போர் கூடம் மற்றும் மாகாண அலுவலக லபுதுவ ‘தக்ஷினபாய’ வில் இடம்பெற்றது. தென் மாகாண சபையில் இரண்டு வருடங்கள் பயிற்சிக் காலத்தை நிறைவு … Read more

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன … Read more