விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மஹிந்த அமரவீர

விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிற்கிடையிலான கலந்துரையாடல் (31/03/2023) விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்துவதுடன் விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய … Read more

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் … Read more

வவுனியாவில் விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ நெல் அரசாங்கத்தால் கொள்வனவு

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ கிராம் நெல் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ நெல், 14% ஈரப்பதனுக்கு குறைவாக உள்ள நெல் ஒரு கிலோ 100 ரூபாவிற்கும், 14% முதல் 22% ஈரப்பதம் உள்ள நெல் ஒரு கிலோ 88 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது. … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டி நாளை (02) ஆரம்பமாகவுள்ளது. நேற்று முன்தினம் (31) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த கவனம் செலுத்ப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம் காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக வேறு இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு (மார்ச் 31) விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், … Read more

“சிறந்த நடைமுறைகள் 2022” இற்கான ஐரோப்பிய விருதை வென்ற பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம் தனது விருதை ஜனாதிபதியிடம் கையளித்தது

இலங்கையில் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிதித் தீர்வுகளை வழங்கும் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்திற்கு, சிறந்த நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய சமூகத்தின் தர ஆராய்ச்சி (European Society Quality Research – ESQR) வருடாந்தம் வழங்கும் “சிறந்த நடைமுறைகள் 2022” (Best Practices 2022) விருது வழங்கப்பட்டது. 2022 டிசம்பர் 11, அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டதுடன் அது சமீபத்தில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் … Read more

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (30) இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் … Read more

''ஆதர்ஷ சிற்பி'' கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான கால அவகாசம் நிறைவு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆதர்ஷ சிற்பி’ கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான எழுத்தாளர்கள் தமது படைப்புகளை நாடு முழுவதிலுமிருந்து ஆர்வத்துடன் அனுப்பி வைத்துள்ளார்கள். அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். படைப்புகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு பரிசுக்குரியவை தேர்ந்தெடுக்கப்படும். வெற்றியாளர்களின் முகவரிக்கு இது சம்பந்தமான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான … Read more

3 ஆவது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (31) காலை 6.30 மணிக்கு ஹாமில்டனில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 ஆவது … Read more

பாடசாலையில் தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழி பிரயோகம் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் தரம் ஒன்றில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்காக 13, 800 ஆசிரியர்கள் தமது பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். கங்கொடவில சமுத்திரா தேவி பாலிகா கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (30) இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்காக ஆங்கில மொழிப் பிரயோகத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதுதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… சவால்களை பொறுப்பேற்பதற்கு தயாராக … Read more