சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன என எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும், ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும், கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த எகிப்து தூதுவர், தமது … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – அமைச்சரவைப் பேச்சாளர்

நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பிரான்சின் லசார்ட் நிறுவனம், கிளிபேர்ட் ஹான்ஸ் நிறுவனம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கை நிபுணர்கள் இணைந்து கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். … Read more

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் … Read more

ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே … Read more

கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் இலங்கையின் தலைமையில் 2023 மார்ச் 20ஆந் திகதி 23 ஐயோரா உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. ஐயோரா செயலகத்தின் பொதுச்செயலாளர் சல்மான் அல் ஃபரிசி மற்றும் செயலகத்தின் பிரதிநிதிகள் மொரிஷியஸில் உள்ள ஐயோரா செயலகத்தில் இருந்து இணையவழி மெய்நிகர் முறையில் பங்கேற்றனர். கூட்டத்தை ஆரம்பித்து வைத்த வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் … Read more

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பண்டாரவளை, பூனாகல, கம்பரகலை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (19) மாலை கம்பரகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசிக்கும் 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை … Read more

டொலர் தொடர்பிலான நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

நாட்டின் அத்தியாவசிய துறைகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வார காலப் பகுதியில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக சில மாற்றங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் அமெரிக்க டொலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சிலர் குற்றஞ்சாட்ட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் டொலர் தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வாரம் மிகவும் முக்கியமானதாக அமையும். சர்வதேச நாணய நிதியம் … Read more

தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகின்றன..

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிற்சங்கங்களின் தேவையற்ற வேலைநிறுத்தம் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தடைபடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா, சீதுவ, கிழக்கு மூகலங்கமுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை இன்று (19) மக்களிடம் கையளிக்கும் … Read more

ஜனாதிபதி தலைமையில் “சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (16) நடைபெற்றது. கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.   பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார … Read more

தொடர் தோல்வியின் பின்னர், வெற்றி பெற்ற றோயல் கிரிக்கெட் அணியை போன்று இலங்கையையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவோம்! – ஜனாதிபதி

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே … Read more