பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவின் அனுமதி

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு இன்று (05) பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த மைக்கல் டி. சில்வா, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.எம்.ஐ. பண்டாரநாயக்க மற்றும் … Read more

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பில், உதவி உயர்ஸ்தானிகர் கில்லியன் ட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் … Read more

நாளை ,வழமையான ரெயில், பஸ் சேவைகள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ்களும் நாளை வழமையான முறையில் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நாளை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உரிய பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐயாயிரத்து 200 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் தூர இடங்களுக்காக இணைத்துக் … Read more

மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் இரண்டாயிரம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் வண்டிகள் ஆகிய வாகனங்களுக்கு எண்ணாயிரம் ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பஸ்கள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு … Read more

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட் பெறுமதியான காசோலையை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்காப்பின் நிரந்தரப் பிரதிநிதியான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன அவர்களிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள பாராளுமன்றத்தில் வைத்து கையளித்தார். இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எடுத்த தனது முயற்சிக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்த அதேவேளையில், ரத்தனகோசின் காலத்திலிருந்து பௌத்தத்தின் அடிப்படையில் தாய்லாந்துடன் நீண்டகால உறவை … Read more

செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஒரு மாதகாலத்துக்குள் வழங்கவும்

தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்பொழுது செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அவை மதிப்பிடப்பட்ட விதம் மற்றும் இவற்றை அனுமதிப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையொன்று ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவுக்குப் பணிப்புரை விடுத்தார். இது தொடர்பான விபரங்கள் அடுத்த கோப் குழுக் … Read more

நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்க நடவடிக்கை

  நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்த அமைச்சர் சிறு போக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ கரிம உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் nமைச்சர் கூறினார்.யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. அதன்படி, 65 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உர நிறுவனம் இதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. உர விநியோகத்திற்காக … Read more

திருகோணமலை மாவட்ட கடமைகளை பொறுப்பேற்றார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார். “திருகோணமலை மாவட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். பல்லினங்கள் மற்றும் பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட மாவட்டமாகும். நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமக்கு இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட இந்நிமனத்திற்கான பொறுப்புக்களை இன மத மொழி வேறுபாடின்றி மேற்கொள்வதாக” … Read more

டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி-ருவென்டி போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், ரி-ருவென்டி போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன. நான்காமிடத்தில் தென்னாபிரிக்க அணியும், ஐந்தாமிடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. ஏழாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலிய அணியும், நான்காம் இடத்தில் இந்திய அணியும் ஐந்தாமிடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. எட்டாவது … Read more

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 18 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியொன்றில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், … Read more