கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று, கொந்தளிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

உலக வர்த்தக நிலையத்தில் ஏற்றுமதி தர ஆடை கண்காட்சி

முதலீட்டு சபை நலன்புரி சங்கத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆடை கண்காட்சி இம்முறையும் உலக வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றது. இந்த ஆடை கண்காட்சி மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெற்றது.

பரீட்சைக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர்

பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அது அமைச்சு எதிர்கொண்ட பாரிய பிரச்சினையல்ல என்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு தேவையான அனைத்து காகித தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதேவேளை பரீட்சைகளை நடத்த அதிகளவான காகிதங்கள் தேவைப்படுவதால் அவற்றை கொள்வனசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் கூறினார்.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான பாதுகாவலரான மாண்புமிகு நெஸ்பியின் கடந்த கால நினைவுகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியீடு

தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான ” Sri Lanka: Paradise Lost; Paradise Regained ” இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், ,இராஜதந்திரிகள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி … Read more

தனிநபர் கடத்தல் முயற்சியினை வழிநடாத்திய இராணுவ அதிகாரி இராணுவ சேவையில் இருந்து பணிநீக்கம்

இரண்டு அயலவர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக, 2021 ஜூன் மாத இறுதியில், நுரைச்சோலை, பனியடியில் உள்ள ஒரு நபரை இராணுவ அதிகாரி ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை இராணுவத்தின் கெப்டன் நிலை அதிகாரியொருவரை 2022 மார்ச் 30 ஆம் திகதியிலிருந்து இராணுவ நீதிபதி குழு சேவையிலிருந்து நீக்கியுள்ளது. 2021 ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் … Read more

போக்குவரத்து சேவைகளில் பாதிப்பு இல்லை – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு

நாட்டில் டீசலுக்கான தட்டுப்பாடு இருந்தபோதிலும் ,இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் தடைகள் இல்லை. மேலதிகமாக பஸ்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. நாளாந்தம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் 5 ஆயிரம் போக்குவரத்து சபை பஸ்கள் ,தற்போது வழமை போன்று நாடளாவிய ரீதியில் தமது தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதாகவும், கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பந்துக ஸ்வர்ண … Read more

Central Bank continues regulatory actions against errant Money Changers

The Central Bank’s continued spot examinations at the places of Authorized Money Changers have revealed that the following Money Changers have transacted at rates beyond the rates offered to them by Licensed Banks, thereby violating the Directions issued to them under the provisions of Foreign Exchange Act No. 12 of 2017. i.Swiss Money Exchange (Pvt) … Read more

மிரிஹான சம்பவம் – அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளையே குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல

மிரிஹான ஜனாதிபதியின் வீட்டருகில் 31.03.2022 அன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் .அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளையே குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெளிவுபடுத்தினார். டொலர் மற்றும் மின்சார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியிடம் தீர்வில்லை. மக்களை ஏமாற்றுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அமைச்சர் கூறினார். முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இதுவொரு அடிப்படைவாத செயற்பாடு என்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று … Read more

அதிகரித்த வெப்ப நிலை குறித்து விசேட அறிவிப்பு

நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் வழமையான வெப்ப நிலையை விட அதிகமாகவும், உடல் வெப்பநிலை வழமை நிலையிலும் விட அதிகரிக்கும் நிலையில் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.. இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனித உடலில் வெப்பக் குறியீட்டின் … Read more

அடிப்படைவாதப் போதனைகளை பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது…

இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்கின்ற போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியுடன் கடந்த, … Read more