`சேர்லாம் இருக்கு; ஆனா, உக்கார்ந்தா எங்க வேலை இருக்காது!' – நாற்காலி சட்டமும் நடைமுறையும்

அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்கள் உட்காருவதற்கு கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா 2021 செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலில் உள்ளதா, உண்மையிலேயே ஊழியர்களுக்குப் பணியிடங்களில் நாற்காலி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். Representational Image பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஆண் … Read more

சென்னை: மாமியாரிடம் தங்கச் செயினை திருடிய மருமகள்! – ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?!

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்துவரும் லலிதா, கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர், லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். சிசிடிவி கேமரா அதனால் அதிர்ச்சியடைந்த லலிதா வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸ் நிலையத்தில் … Read more

நகைக்கடன் தள்ளுபடி: `விடுபட்டவர்களும் ஆதாரத்தைக் காட்டி பயன்பெறலாம்!' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் நகைக்கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் நகைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி … Read more

BB Ultimate எவிக்‌ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவைடந்ததைத் தொடர்ந்து, ஒடிடியில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். BB Ultimate சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் … Read more

ஒபிஎஸ் சகோதரர் மகன் காரை சிறைபிடித்த திமுகவினர்! – வேட்பாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினாரா?!

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று இரவு 24 ஆவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருக்களில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துகுகனின் காரில் வைத்து வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்குவாதக் கூறி திமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். அதே வார்டில் … Read more

FIR விமர்சனம்: கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்… ஆனால், படம் பேசும் அரசியல் சரியா?!

இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுபுத்தியின் காரணமாக IITயில் கோல்டு மெடலிஸ்ட்டாக இருந்தாலும் இர்ஃபானுக்கு அவர் படிப்புக்கான வேலை இன்னும் கிடைக்க மறுக்கிறது. இன்னொரு பக்கம் ISIS தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அப்துல்லா ஒரு தமிழர் என்பதும், அவர்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்பது NIAவுக்குத் தெரிய வருகிறது. இர்ஃபானின் மதமும், அவர் பேசிய விதமும், காவல்துறைக்கு சந்தேகத்தைக் கிளப்ப அவரைத் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறார். அடுத்த என்ன நடக்கிறது, தமிழகம் தப்பித்ததா, உண்மையில் … Read more

“தேர்தலில் வெற்றிக்குப் பின் பொது சிவில் சட்டம்..!” – உத்தரகாண்ட் பாஜக முதல்வர்

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் வரும் 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய … Read more

வேலூர் மாநகராட்சி: பரபர தேர்தல் களம்… முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்யாமலேயே வேலூர் மாநகராட்சியிலிருக்கும் இரண்டு வார்டுகளில் போட்டியின்றி வெற்றிபெற்றிருக்கிறார்கள் தி.மு.க வேட்பாளர்கள். 7-வது வார்டில், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற போட்டி வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுக்கொண்டதால், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி வெற்றிபெற்றார். அதேபோல, 8-வது வார்டிலும் எதிரணி வேட்பாளர்களின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார். இந்த 2 வார்டுகளைத் … Read more

தூங்கிக்கொண்டிருந்த கணவனை மகனுடன் சேர்ந்து கொன்று 7-வது மாடியிலிருந்து வீசிய மனைவி! – நடந்தது என்ன?

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் சந்தான கிருஷ்ணன் சாஸ்திரி(53). இவர் சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவரின் மகன் அர்விந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஜியரிங் படித்தார். அவர் கனடாவில் சென்று மேம்படிப்பு படிக்க விரும்பினார். இதற்காக பணம் கொடுக்கும்படி அர்விந்த்தும் அவரது தாயார் ஜெய்ஷீலாவும் சாஸ்திரியிடம் கேட்டனர். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் … Read more

`எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?’ – நடந்ததும் பின்னணியும்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் வலம் வருகிறார் எலான் மஸ்க். அதற்கு முக்கியக் காரணம் அவர் நடத்தி வரும் டெஸ்லா கார் நிறுவனமும், அதில் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய முதலீடும்தான்! மின்சாரக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக புகழ்ப்பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவத்துக்குதான் இப்போது மிகப்பெரிய அவப்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, டெஸ்லா நிறுவனத்தில் நிற அடிப்படையிலான இனப்பாகுபாடு காட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. Tesla | டெஸ்லா நிறுவனத்தில் இனப்பாகுபாடு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமான்ட் … Read more