சென்னை: மது போதையில் ஆட்டோ ஓட்டுநரைக் குத்திக்கொலைசெய்துவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்ட நண்பர்கள்!

சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் (28). இவர் நேற்று இரவு மணலி புதுநகர்ப் பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, ரவிச்சந்திரனின் நான்கு நண்பர்களும் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். அதோடு, அருகிலிருந்த கல்லைத் தூக்கி அவரின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். ரவிச்சந்திரன் சம்பவமறிந்து வந்த மணலி புதுநகர் பகுதி காவல்துறையினர், ரவிச்சந்திரனின் உடலைக் … Read more

5-ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம்… 59 வயது தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது. எஸ்.பி அலுவலகத்தின் முன் பக்கம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் நித்ய லட்சுமணவேல்(59). இவர் இந்த பள்ளியில் உள்ள மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி மாணவிகளைத் தொட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும், சைல்டு லைன் எண் 1098-க்கும் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல … Read more

“அஸ்ஸாமைத் தொடர்ந்து நாகாலாந்து, மணிப்பூரிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க மத்திய செயல்படுகிறது" – மோடி

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தன. 1958-ல் இந்த சட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களில் செயல்படும் ராணுவங்களுக்கு, சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் ஏதும் இல்லாமல் கைது செய்தல், விசாரணை நடத்துதல், சுட்டுத்தள்ளுதல் போன்ற பல சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்த நிலையில், அஸ்ஸாமில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, … Read more

`உள்ளூர் நகராட்சி அமைப்புகளைக் கலைத்து உக்ரைனை சரணடையவைப்பதே ரஷ்யாவின் திட்டம்'-அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் அக்கிரமிப்புப் போரானது இன்னும் முடிவடையாமல், மூன்றாவது மாதத்தையும் தொட்டுவிட்டது. போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இரு நாட்டு தரப்பினரும் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் இதுவரை போரை நிறுத்தும் அறிகுறியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், இரு தினங்களுக்கு முன்பு ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், `உக்ரைனில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தாலும், பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடுகளை எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ எனக் … Read more

தண்டந்தோட்டம் பாரிவேட்டைத் திருவிழா: சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந்தோட்டம் கிராமம் உள்ளது. பொதுவாக எல்லா ஊர்களிலும் எல்லைச் சாமியான ஐயனார் ஊரின் வெளியே இருந்து காவல் காப்பார். சிவாலயமோ, பெருமாள் கோயிலோ அது ஊரின் மையமாக அமைந்திருக்கும். ஆனால் இவ்வூரில் அகஸ்திய மகரிஷிக்குக் காட்சி தந்த சிவகாமசுந்தரி சமேத நடனபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் ஊரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது.  முத்துவேலாயுதசுவாமி சந்நிதியும், தர்ம சாஸ்தா சந்நிதியும் அமைந்த ஐயனார் கோயில் ஊரின் பிரதான கோயிலாகத் திகழ்கிறது. மிகவும் சிறப்புவாய்ந்த முத்துவேலாயுதசுவாமி கோயிலில் பல்லாண்டுகளாக, … Read more

How to: வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to take care of indoor plants?

பலருக்கும் வீட்டினுள் வளர்க்கக்கூடிய இண்டோர் செடிகளின் (indoor plant) மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். கைக்கு அடக்கமான கப்புகளில் தொடங்கி, சிறு சிறு செடிகளில் இருந்து பெரிய செடிகள் வரை வீட்டினுள் கிடைக்கும் சிறிய இடங்களில், மேசைகளில், படிக்கும் அறைகளில் என இவற்றை வளர்க்கலாம். பார்க்க பசுமையாக, அழகாக, மனதை லேசாக்கக் கூடிய இந்த செடிகளை வளர்க்க சிறிய அளவிலான பராமரிப்பே போதும். என்றாலும், இண்டோர் செடிகளை கவனிக்காமல் விட்டால் சீக்கிரமே செடிகள் மடிந்துவிடும் ஆபத்தும் உள்ளது. … Read more

KRK Review: காத்துவாக்குல 'காமெடி' இருக்கு ஓகே… காதல் எங்க பாஸ்?!

வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமைந்திடாத ஒருவனுக்கு, இரண்டு பெண்கள் வந்ததும் மொத்தமாக எல்லாம் மாறிவிட, அவன் அந்த இருவரையும் ‘சமமாக’க் காதல் செய்யும் கதையே இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. சிறுவயது முதலே தன்னை துரதிர்ஷ்டசாலியாக நினைத்து தன் தாயிடம் இருந்தே விலகி வாழ்கிறார் ராம்போ. பகலில் கேப் டிரைவர், இரவில் பப்பில் பவுன்சர் என மாறி மாறி உழைக்க, அவரின் அந்தப் பணிகளின் வாயிலாகவே அறிமுகமாகிறார்கள் கண்மணியும், கதிஜாவும். சட்டென ராம்போவின் வாழ்வில் எல்லாமே நல்லதாய் … Read more

“நான் இளங்காளையாக இருந்தபோது பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியிருக்கிறேன்!" – சட்டப்பேரவையில் ஓபிஎஸ்

இன்று சட்டப்பேரவையில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறைகளின் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ சேகர், ஓ.பி.எஸ்-ஐ `ஜல்லிக்கட்டு நாயகர்!’ எனப் புகழ்ந்து பேசினார். அப்போது குறிக்கிட்டப் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கின்றனர். அவர் எத்தனை ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியிருக்கிறார்?” என்று கூறினார். ஓ.பி.எஸ் அதற்கு பதிலளித்துப் பேசிய ஓ.பி.எஸ், “நான் இளம்வயது … Read more

பெருங்குடி குப்பைக் கிடங்கில் 2-வது நாளாகக் கொழுந்துவிட்டு எரியும் தீ… போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் 34 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இங்கிருக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் இந்தக் கிடங்கில் நடைபெற்றுவருகிறது. பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து இதில், குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள மற்ற குப்பைகள் பெருங்குடி … Read more