திருமழபாடி: `நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்' குவிந்த பக்தர்கள்!

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாணம் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் இந்தத் திருமணத்தை நேரில் காணும் வரன்களுக்கு அடுத்த நந்தி கல்யாணத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் தமிழ்நாட்டிலேயே திருமழபாடி திருத்தலம் மட்டும்தான். திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா! சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் … Read more

“உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் புல்லட் ரயில் போல் ஓடுகிறது” – அகிலேஷ் யாதவ்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் தோல்வியடைந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சட்டமன்றத்துக்குள் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் யோகியின் ஆளும் பா.ஜ.க அரசை விமர்சித்து அகிலேஷ் யாதவ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். யோகி ஆதித்யநாத் அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவின் இரண்டாவது ஆட்சியில் குற்றவாளிகள் முன்பை விடவும் அச்சமின்றி தைரியமாக உள்ளனர். போலீஸை … Read more

'கொரோனா உருவாக்கிய உளவியல் பிரச்னைகள்?’ உளவியல் ஆலோசகர்களின் உலக ஆலோசனை

உலக அளவில் உளவியல் ஆலோசகர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வு கருத்தரங்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு பல்வேறு தலைப்புகளில் உரையாடல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கை ‘Indian Academy of Proessional Supervisors’ என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. இந்த அமைப்பின் நிறுவனரும் தலைவருமான உளவியல் ஆலோசகர் வாசுகி மதிவாணன் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்துக் கூறினார்… “உலக அளவில் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவது பொதுவான பிரச்னையாக இருக்கிறது. அதுவும் … Read more

ரோஜா மட்டுமல்ல; இவர்களும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த கதாநாயகிகள்தான்!| Photo Story

சினிமாவின் புகழும் வெளிச்சமும் அரசியல் பாதையில் ஒளியாக அமையும் என இங்கு வந்தவர்கள் நிறைய பேர். அப்படி திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த கதாநாயகிகளைப் பற்றி பார்ப்போம். ரோஜா ஆந்திரா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நேற்று அம்மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இதுவொரு மைல்கல். திவ்யா ஸ்பந்தனா பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர். கர்நாடக மாண்ட்யா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று … Read more

“அரசியலைப் புகுத்தி கட்சியைப் பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்கவே நடக்காது" – மு.க.ஸ்டாலின்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேராவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணாமலை இந்த நிலையில், அயோத்தியா மண்டபப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சாமான்யர்களை பாதிக்கும் பிரச்னைகளில் பா.ஜ.க அதிக கவனம் செலுத்த வேண்டும். … Read more

நீண்ட நாட்கள் வாழ வேண்டுமா? குறைவாக சாப்பிடுங்கள்!

வயதான காலத்தில் ‘உண்ணும் அளவு குறைந்துவிட்டதே’ என்று கவலைப்படத் தேவையில்லை. குறைவான உணவாக இருந்தாலும் அது நிறைவான சத்துள்ள உணவாக இருக்க வேண்டும்; எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விரைவில் செரிக்கக் கூடியதாகவும் விலையிம் சற்று மலிவாகவும் இருந்தால் மிகவும் நல்லது. முதுமைக் காலத்தில் திடீர் மாற்றம் எதுவாக இருந்தாலும் அது வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும். உதாரணமாக, உணவு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். சில பேர் என் கிளினிக்கில், எனது அப்பாவுக்கு வயது 60-70 என்று கூறி, அதற்கு ஏதாவது … Read more

ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம்: 28 பேர் மட்டுமே பங்கேற்பு; மின் விளக்குகளால் ஒளிரும் ரன்பீர் வீடு!

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டிற்கு திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. திருமணத்தேதி தொடர்பாக மாறுபட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. திருமணம் நடக்கப்போவது நிச்சயம் என்பதை உறுதிபடுத்திய இருவரது குடும்பமும் திருமண தேதியை மட்டும் உறுதியாகச் சொல்லவில்லை. ஆரம்பத்தில் இம்மாதம் 17-ம் தேதி என்று செய்தி வெளியானது. பின்னர் 14, 15, 16 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வந்து … Read more

“ரஷ்ய ராணுவம், பாலியல் வன்கொடுமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” – ஐ.நாவில் உக்ரைன் காட்டம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டு தாக்குதல், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் உக்ரேனிய குடிமக்களைப் படுகொலை செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் கூறிவந்தது. இதுதொடர்பாக ஐ.நா சபையில் பலமுறை விவாதிக்கப்பட்டும் ரஷ்யா அதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் பாலியல் … Read more

மேஜிக்கல் லேடி – 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க!

இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு கதை காட்சி 1: (தக்க பின்னணி இசையுடன் கூடிய காட்சிகள் ஓர் மிகப்பெரிய அரங்கு. அதில் உலகெங்கும் இருந்து வந்திருக்கும், விஞ்ஞானிகள் எல்லோரும் குழுமி இருக்கிறார்கள். அங்கு ஒரு சிறு மேடை. விஞ்ஞானிகள் ஒவ்வொருவராக, அவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகளையும், அதன் அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அரங்கினுள் ஒருவன் அதிரடியாக நுழைகிறான். அவனுடன் சேவகர்கள் சிலரும் வருகிறார்கள். அவன் அந்த மேடை மீது … Read more

“ரஷ்ய – உக்ரைன் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும்!” – ஜோ பைடனுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். உக்ரைனில் நிலவும் போர் சூழ்நிலைகள் குறித்து இந்தியமற்றும் அமெரிக்க அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் … Read more