26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான மும்பை 26/11 தாக்குதல்களின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீதுக்கு இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் … Read more

உக்ரைன் ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்: 30-க்கும் மேற்பட்டோர் பலி, பலருக்கு காயம்

கீவ்: கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக மாநில ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளால் குண்டுவீச்சுக்கு உள்ளான பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை இரண்டு ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியதாக அந்த நிறுவனம் கூறியது. “கிராமடோர்ஸ்க் ரயில் … Read more

பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை

இலங்கையில் மோசமடைந்த பொருளாதார சீர்குலைவை சரிசெய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சீர்கேட்டை ஓரளாவது சரி செய்ய வேண்டுமானால், அரசுக்கு வருமானம் வேண்டும். நிதியுதவிகள் தேவை. ஆனால் விரைவான வருவாயைப் பெற இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு வித்தியாசமாய் இருக்கிறது. பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு வாக்கெடுப்பும் இன்றி, இலங்கை நாடாளுமன்றம், பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும், பிற்போக்கான கூடுதல் … Read more

Viral Video: மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா… ரஷ்ய வீரரை நடுங்க வைத்த உக்ரைன் ட்ரோன்…

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 6 வாரங்களை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனை ஆக்கிரமித்து புதிய ஆட்சியாளரை நியமிப்போம் என சூளுரைத்த ரஷ்யா தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உக்ரைன் வீரர்களின் துணிச்சலான பதிலடி தாக்குதலால் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி வருகின்றன.  தங்களின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியானதால் ரஷ்ய ராணுவ வீரர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பின்வாங்கும் நடவடிக்கையின்போது பொதுமக்கள் மீது … Read more

அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!

நீதிமன்ற அமைப்புகள் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்றார் போல் மாறுபடும். இந்திய உச்சநீதிமன்ற அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறானது அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பு. அதாவது, இந்தியாவில் பணிபுரியும் உச்சநீதிமன்ற  நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை மட்டுமே. ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பில் ஓய்வுக்கான வயதுவரம்பு இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் நீதிபதிகள்தான். சுய விருப்பத்தின்பேரில் வேண்டுமானால் ஓய்வு பெறலாம். செனட் சபை ஒப்புதலின்படிதான் அமெரிக்காவில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கே வராது. … Read more

இதுதான் பேய் சுறாவா? கடலில் இருந்து கிடைத்த அரிய வகை உயிரினம்

ரஷ்ய மீனவர் ஒருவர் கடலின் ஆழத்தில் ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார், அதை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இந்த உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிராகன் போன்ற உயிரினம் அது. கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உயிரினம் இதற்கு முன் பார்த்திராத ஒன்று. அது என்ன தெரியுமா? இது சிமேரா அதாவது குருத்தெலும்பு மீன் வகை. இது பேய் சுறா என்றும் அழைக்கப்படுகிறது. ரோமன் என்ற ரஷ்ய மீனவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.   … Read more

UNHRCஇல் ரஷ்யா சஸ்பெண்ட்! இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாதது ஏன்?

உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ரஷ்யாவை தற்காலிகமாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது. … Read more

கூட்டமாய் வந்து மீன் வேட்டை நடத்தும் சிங்கங்கள்

நாட்டுக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள் தனது இடத்திற்கு செல்ல மறுக்கும் விநோதமான சம்பத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டையும் எதிர்கொள்கிறது கனடாவின் மீன் பண்ணை ஒன்று. ஒரு பண்ணைக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள், அங்கிருந்த மீன்களை சாப்பிட்டு முடித்த பிறகும் வெளியேற மறுக்கின்றன. தொழில்துறை மீன் பண்ணையில் நுழைந்த கடல் சிங்கங்கள் கட்டுப்பாடுகள் இன்றி மீன்களை உண்டு ஏப்பம் விடுகின்றன.   மேற்கு கனடாவில், ஒரு தொழில்துறை மீன் பண்ணைக்குள் நுழைந்த டஜன் கணக்கான கடல் சிங்கங்கள், வாரக்கணக்கில் அங்கேயே … Read more

பூமியை சிறுகோள் தாக்கியதால் உயிரிழந்த டைனோசரின் புதைபடிமம்!

சிறுகோள் பூமியைத் தாக்கியதில் கொல்லப்பட்ட டைனோசரின் ‘பாதுகாக்கப்பட்ட’ புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுகோள் பூமியைத் தாக்கிய காலத்தில் உலகில் உயிருடன் இருந்ததாகக் கூறப்படும் டைனோசரின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவில் சிறுகோள் தாக்கப்பட்ட இடத்திலிருந்து 3,000 கிமீ தொலைவில் உள்ள வடக்கு டகோட்டாவில் உள்ள டானிஸில் உள்ள ஒரு புதைபடிவ தளத்தில் தோலால் மூடப்பட்ட தெஸ்செலோசரஸ் என்னும் டைனோசரசின் மூட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறுகோள் ஒன்று பூமியில் மோதியபோது  … Read more

காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்

மரங்களிலும், செடிகளிலும் உயிர்கள் இருப்பது பல  ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. விலங்குகளும் பரஸ்ரம், அவைகளுக்கான சொந்த மொழியில் பேசிக் கொள்கின்றன. இந்நிலையில், இப்போது  வெளிவந்துள்ள ஒரு புதிய ஆராய்ச்சியில், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. காளான்கள் தங்களுக்குள் பேசும் போது 50 வார்த்தைகளை பயன்படுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது … Read more