மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (31) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக இலங்கையில் முன்னெடுக்ககூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் சிறார்களுக்கான போசாக்கு உணவு, சுகாதார மேம்பாடு மற்றும் நவீன … Read more

தாய்லாந்துடனான உறவுகளை இலங்கை புதுப்பிக்கிறது

பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பிரதமர் திணேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான மூன்று நாள் விஜயத்தின் போது பேங்கொக்கில் உள்ள அரசாங்க இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம் , முதலீடு மற்றும் சமய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காகவும் பிரதமர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். … Read more

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலை நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை … Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலையிலும் வெளி தரப்பினர் நுழைவதற்கு தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (29) ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு நாடளாவிய ரீதியில் … Read more

வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து  அறவிடப்படும்  தண்டப்பணத்தை குறைக்கும் ஒழுங்கு விதிகளுக்கு  அனுமதி

செல்லுபடியாகும் வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கான குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.  பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இந்த … Read more

யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளை எந்தவொரு அரச திணைக்களத்திற்கும் வழங்குவதற்கான தீர்மானங்கள் இல்லை – கடற்றொழில் அமைச்சர்

சில ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது – கடற்றொழில் அமைச்சர் யாழ் மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் வழங்குவதற்கான தீர்மானங்கள் எவையும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் … Read more

முல்லைத்தீவில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் இதுவரை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (மே 19) மேலும் சுமார் 08.178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரையின்படி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களால், முல்லைத்தீவு … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் குழு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான தசுன் ஷானக தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிக்கான 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்கள் குறித்த விபரம் … Read more

படையினரால் 'பசுமை விவசாயம்' மற்றும் 'தலைமைத்துவம்' பற்றி மாணவர்களுக்கு செயலமர்வு

முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர்களுடன் இணைந்து அண்மையில் கொன்வெவ மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் ஆர்ஜி சேனநாயக்க மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் 70 மாணவர்களுக்கு ‘ஹரித நியமுவோ’ (பசுமை முன்னோடி) என்ற தொனிப்பொருளில் செயலமர்வை (27) வயம்ப பயிற்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். பசுமை விவசாயத் துறையில் வெற்றிகரமான தலைவர்களாக மாறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவைக் கொண்டு மாணவர்களை அறிவூட்டுவதற்காக இந்தப் பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது. முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் … Read more

யாழில் வீதி விபத்துக்களை தடுக்க இன்று முதல் விசேட திட்டம்

யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் வீதி விபத்துகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனால் வீதி விபத்துக்ளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, … Read more