வவுனியாவில் அரச ஊழியர்களுக்குக் காணி வழங்கும் செயற்பாடு தொடர்பில் தகவல் கோரல்!

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்குக் காணி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்குக் காணி வழங்குவதற்காக ஓமந்தை பகுதியில் 2010ஆம் ஆண்டளவில் அரச ஊழியர் வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன்போது, சுமார் 700இற்கும் மேற்பட்ட காணித்துண்டுகள் அரச ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. பகிரங்கமாக விண்ணப்பங்கள் இந்நிலையில், தற்போது மேலும் 219 பேருக்குக் காணித் துண்டுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் … Read more

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சி தரும் செய்தி

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என   இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நியச் செலாவணி தட்டுப்பாடு இல்லை தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்நியச் செலாவனி தட்டுப்பாடு இல்லை.  எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை.  தற்போது வங்கி முறை … Read more

கனேடிய உளவுப்பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை

காலநிலை மாற்றங்களினால் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அந்நாட்டு உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் சுபீட்சத்திற்கும், தேசியப்பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர். கடல் மட்டம் உயர்வடைவதன் காரணத்தினால் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அட்லான்டிக் மாகாணங்களின் சில பகுதிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. காலநிலை மாற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் தங்கள் … Read more

தேர்தல் பிற்போடல் எதிர்பார்க்கப்பட்டதே

Courtesy: கட்டுரையாளர் தி.திபாகரன் MA இலங்கையின் இன்றைய நடப்பு அரசியலில் தேர்தல் பிற்போடல் என்பதற்கு பின்னால் ஒரு பாரதூரமான அரசியல் உண்டு. இலங்கையின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போவது என்பதை இந்த தேர்தல் பிற்போடல் வெளிக்காட்டி நிற்கிறது. உள்ளூராட்சி தேர்தல் மாத்திரம் இங்கே பிற்போடப்படவில்லை. அது மாகாண சபை தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் பிற்போடுவதாக மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இத்தேர்தல்கள் நடக்க மாட்டாது என்பதையும் பறைசாற்றி நிற்கிறது. இன்றைய இலங்கைத் தீவின் அரசியல் நிலையில் … Read more

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. புலம்பெயர் கண்காணிப்பகத்தின் அறிவிப்பு  தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு … Read more

100க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் மூடப்படும்! வெளியான தகவல்

100க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை வாரியங்களின் சேவைகள் தேவை இல்லை அல்லது தற்போதுள்ள நிறுவனங்களால் செய்யப்படலாம் என்று தெரியவந்ததை அடுத்து, அவற்றின் அதிகாரங்களை அரசாங்கம் முடக்கும் அல்லது மாற்றும் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 திணைக்களங்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை வாரியங்கள் மூடப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இன்னும் 50 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட உள்ளன.’ நிறுவனங்களை மூடுவதற்கான முடிவை எடுப்பதில் அதிக செலவுகள், கடமைகள் மற்றும் அவற்றின் செயல்திறன் ஆகியவை … Read more

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்!

அவுஸ்திரேலியாவில் மே மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கிரீன் கட்சி சார்பாக சுஜன் என்ற தமிழ் இளைஞர் தேர்தலில் களமிறங்கப்பட்டுள்ளார். தமிழர்களுக்கு முழு ஆதரவு அவுஸ்திரேலியாவில் மனித உரிமை செயற்பாடு, இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான செயற்பாடு மற்றும்  குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளில் தமிழர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் சுஜன், சிட்னி மாநில தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து … Read more

சிறார்களை அவசர அவசரமாக வெளியேற்றும் உக்ரைன்… சுற்றிவளைக்கப்பட்ட நகரம்

உக்ரைனின் பக்முத் நகரம் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா வசம் சிக்கலாம் என்ற நிலையில், அங்குள்ள சிறார்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியேறிவரும் அப்பாவி மக்கள் உக்ரைனின் பக்முத் நகரம் கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருந்த மக்கள், வெளியேறி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். @getty கடந்த நான்கு மாதங்களாக பக்முத் நகரம் மீது ரஷ்யா குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள் மட்டுமின்றி, தனியார் படையான வாக்னர் குழுவும் … Read more

3000 அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் 3000 அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்பதால், தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.   அரச ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள கடினமான நிலை இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பணியாளர்கள் பணியிடங்களில் … Read more