“சதோச” வில் நான்கு பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதோச நிறுவனம் நான்கு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதற்கமைவாக உள்நாட்டு சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும். ரூ.16 குறைக்கப்பட்டுள்ள உள்நாட்டு வெள்ளை அரிசியின் புதிய விலை 189 ரூபாவாகும். அத்துடன் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்உள்ளூர் நாட்டு அரிசி 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 198 ரூபாவாகும்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரச வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சில செயற்திட்டங்களுக்காக செலுத்த வேண்டியுள்ள கொடுப்பனவை செலுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் … Read more

கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா

கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (11) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை பெக்ஸ் (BECS) கல்லூரியின் ஏற்பாட்டில் அதன் தலைமை பணிப்பாளர் ஏ. கே. முருககுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்பள்ளி ஆசிரிய டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 107 முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் இலங்கை பெக்ஸ் (BECS) கல்லூரி, தேசிய சிறுவர் செயலகம் மற்றும் சிறுவர் மகளிர் … Read more

இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் பரீட்சையை குழப்ப எவருக்கும் இடமளிக்க வேண்டாம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

“புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் (2023.01.10) உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் இதனை வலியுறுத்தினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- முடங்கியிருந்த பொருளாதாரம் இப்போது செயற்படுகிறது. முன்னெப்போதையும் விட, பொருளாதார இயந்திரம் மற்றும் சேவை இயந்திரம் செயற்படும் போது, உங்கள் மீதுள்ள பொறுப்பு மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் புதிய சவால்களை வெற்றிகொள்வதற்கான தேவை அதிகமாக உள்ளது. இலங்கையில் … Read more

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு உதவி…

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு உதவி…பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் (CPA) ஆசிய பிராந்திய அலுவலகம் இலங்கையில் திறப்பு… பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய அமைப்பு உதவும் என்று பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் (CPA) பொதுச் செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்தார்.(2023.01.11) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அண்மைய வன்முறைச் செயல்கள் குறித்து … Read more

கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்திற்கொண்டு, வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்திற்கொண்டு, வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். – மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ யாப்பா ஜயவர்தன எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் (2023.01.11) தேர்தல் ஆணையாளர் தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த போது மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன முன்வைத்த கோரிக்கைகள். தேர்தல் காலத்தில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் 16 ஆம் திகதி விஷேட பிறப்பு பதிவு சேவை

யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவினை மேற்கொள்ளத் தவறியவர்களுக்கு, எதிர்வரும் 16.03.2023 மீண்டும் விஷேடபிறப்பு பதிவு சேவைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவை மேற்கொள்ளாத சிறுவர்கள்  உட்பட 31 பேருக்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தலைமையில் இந்த … Read more

மத்திய வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிப் பத்திரம் இன்று (12) இ வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த பிணைமுறிப் பத்திரம் இரண்டு பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும். 50இ000 மில்லியன் ரூபாய் பிணைமுறிப் பத்திரம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. மீதமுள்ள ஒரு இலட்சத்தி பத்தாயிரம் மில்லியன் ரூபா மதிப்புள்ள பிணைமுறிப் பத்திரம் 2027 செப்டம்பர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை இம்மாதம் வெளியிட ஏற்பாடு

அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும். இம்முறை 334,698 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.