அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் – அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு

இலங்கை போக்குவரத்து சபையின் செயல் திறனை விஸ்தரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 75 பேருந்துகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் முன்தினம் (05)   சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். குறித்த பேருந்துகளுள் 25 பேருந்துகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. EPDP news.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக போலி தலதா மாளிகை குறித்து விசாரணை

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும் முன்வைத்த கூற்றுக்கு அமைய விரைவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவிற்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா … Read more

கனடாவில், வெளிநாட்டவர் வீடு வாங்க தடை

கனடாவில் வெளிநாட்டவர் வீடு வாங்க அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பெரும்பாலான நபர்களுக்கு இந்த தடை சட்டம் பொருந்தும் எனவும், தனித்துவமான அம்சங்களில் இதில் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் குடிபெயர விரும்பும் நபர்களுக்கு கனடா சமீப காலமாக கனவு தேசமாக விளங்கி வந்தது. அகதிகளுக்கு அந்நாடு அடைக்கலம் குடியுரிமையை எளிதாக வழங்கி வந்தது. இதன் காரணமாக இலங்கை  ,இந்தியா உட்பட பல … Read more

வீடுகளில் நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

வீடுகளில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் Association of Entomological Officers தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திசாநாயக்க இதுதொடர்பாக தெரிவிக்கையில், தற்போது செயல்படுத்தப்படும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  வெப்ப புகை  விசிறல் நடவடிக்கையிலும் பார்க்க ,குளிர் புகை  விசிறல் முறை பொருத்தமானது என தெரிவித்தார். தற்போது பெரும்பாலான நாடுகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த பல நாடுகள் குளிர் புகை விசிறல் முறையை பயன்படுத்துகின்றன … Read more

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் … Read more

இராணுவ ரக்பி வீரர்களுக்கு பனாகொடையில் புதிய மைதானம்

நாடளாவிய ரீதியில் வலிமைமிக்க அணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ரக்பி/காற்பந்து அணிக்காக பனாகொடயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானம் புதன்கிழமை (4) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைத்தார். இலங்கைப் பொறியியல் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய மைதானத்தை திறந்து வைக்க இராணுவத் தளபதி அவர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதாகையினை திறந்து வைத்தார். அதன்பின், பிரதம அதிதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான புதிய புள்ளி பதிவு பலகையினை திறந்து வைத்தார். … Read more