நாளை ஆரம்பமாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள்

நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் … Read more

இலங்கைக்கு இந்தியா கடும் அழுத்தம் – சீன கப்பலுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய முடிவு

சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 எதிர்வரும் 11ம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது பிராந்தியத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த கப்பல் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு திறன்களைக் கொண்டிருப்பதால் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமிருந்து ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என பொதுச் செயலாளர் கடந்த (03) ஜனாதிபதி அவர்களுக்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை … Read more

மோசமான பக்கங்களை களைந்து நல்ல நோக்கங்களுக்காக மீண்டும் ஒன்றுதிரள்வோம் – ஜனாதிபதி  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமான, குண்டர் பயங்கரவாத செயல்களை நாங்கள் … Read more

சர்வகட்சி ஆட்சிக்கான முன்மொழிவுகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது (சேனாங்கய) பிரிவினருடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்கள் … Read more

ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமரின் வாழ்த்து  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா Fumio Kishida தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ள ஜப்பானிய பிரதமர், ஜப்பானிய மக்களினதும் அரசாங்கத்தினதும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் மீது … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் எழுதியுள்ள கடிதத்தில் சுடடிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செயலாளர் … Read more

46 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை கப்பல் கொழும்பு வந்தடைந்தது

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் (ஆகஸ்ட் 05) முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) கப்பலில் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட போது இந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லை படையின் ரோந்துக் கப்பலான ‘ஓஷன் ஷீல்ட்’ ல்அழைத்தகுவரப்பட்ட இவர்கள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து, கோவிட் சுகாதார நடைமுறைகள் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்ட … Read more

வடமாகாண ஆளுநர் இராணுவத் தளபதியுடன் கருத்துரையாடல்

கௌரவ வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா அவர்கள் (5)  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்கு வடமாகாண இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இச் சந்திப்பில், சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இச் சந்திப்பின் நிறைவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வடமாகாண ஆளுநருக்கு … Read more