வடமாகாண ஆளுநர் இராணுவத் தளபதியுடன் கருத்துரையாடல்

கௌரவ வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா அவர்கள் (5)  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்கு வடமாகாண இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.

இச் சந்திப்பில், சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இச் சந்திப்பின் நிறைவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வடமாகாண ஆளுநருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.