நாட்டில் குரங்கு அம்மை: நோய் பரவும் ஆபத்து இல்லை

குரங்கு அம்மை (Monkeypox) நோயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இவ்வாறான தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவாகியிருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்பு மூலமே இந்த நோய் ஏற்படுகிறது. இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் கைகோர்க்க வேண்டும்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலையை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் எழுந்த உலகளாவிய சவால்கள் காரணமாக பல வளர்முக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் … Read more

கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு

கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தென்கொரிய சர்வதேச கூட்டுறவு கடற்றொழில் அமைப்பின் தலைவர் Im Joon Teak ஆகியோருக்கிடையில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்படி, மீன்பிடித் தொழில் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர். தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், கொரிய அரசும் இதற்கு தேவையான … Read more

தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று போட்டியில் 33 ஓட்டங்களால் டக்வர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. சிட்னியில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி குழு 2 இல் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அணி தனது … Read more

மின்சாரம், பெட்ரோலியம் ,மருத்துவமனை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் 2022 நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகங்கள், மருத்துவமனைகள்,தாதியர் இல்லம் , மருந்தகங்கள் மற்றும் நோயாளர் பிரிவு, பராமரிப்பு பிரிவு, நோயாளிகளின் உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய … Read more

செயலின்றிக் கிடக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை பிரதேச விவசாயிகளும் மக்களும் நன்மையடையும் வகையில் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தொடர்புபட்ட அதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புதிதாக 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளைக் கொண்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிர்வாகத்தினை மாவட்ட அரசாங்க … Read more

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் 05 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். இதன்படி, வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 238 ரூபாவாகவும், நெத்தலி ஒரு கிலோ கிராம் 1300 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 398 ரூபாவாகவும், டின் மீன் ஒன்றின் விலை 585 ரூபாவாகவும் விலை … Read more

தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் போதை மாத்திரைகள்

வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2387 கிராம் நிறையுடைய 4956 போதை மாத்திரைகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவினால் கைப்பட்டப்பட்டுள்ளது. தபால் மதிப்பீட்டுப் பிரிவில்   கடமையாற்றும், வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகளை பரிசோதிக்கும் உதவி சுங்க அத்தியட்சகருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு தபால் பொதி ஒன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட இந்த பொதி கார்ட்போட் பெட்டியொன்றில் பொதியிடப்பட்டிருந்தது. அப்பொதி ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு … Read more