இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் பொனீ ஹோர்பக் (Bonnie Horbach) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (05) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். நெதர்லாந்தின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க உள்நாட்டு தொல்பொருட்களை நல்லெண்ண அடையாளமாக இலங்கைக்கு திருப்பி வழங்கும் நோக்கத்தை தூதுவர் இதன்போது தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி வாய்ப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பல்வேறு துறைகளில் … Read more

பாதுகாப்பு படை வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டான முதலாவது பொப்பி மலர் கௌரவ ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் அணிவிக்கப்பட்டது

முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்கள், இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரை நினைவுகூறும் நோக்கில் நடத்தப்படும் பாதுகாப்புப் படைவீரர்களின் நினைவான பொப்பி தினத்தின் முதலாவது பொப்பி மலரை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய 2022 பாதுகாப்புப் படையின் பொபி நினைவுதினத்தை முன்னிட்டு முப்படைகளின் பிரதானியும், இலங்கை இராணுவ முன்னாள் வீரர்கள் சங்கத்தின் போசகருமான கௌரவ ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி … Read more

கோப் குழுவின் புதிய தலைவராக (பேராசிரியர்) கௌரவ ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் தெரிவு

அரசாங்க பொது முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடருக்கான முதலாவது கோப் குழுக் கூட்டம் இன்று (06) கூடியபோதே இந்தத் தெரிவு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்த்தன அதனை வழிமொழிந்தார். அத்துடன், கோப் … Read more

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில் கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் … Read more

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022 ஓகத்து

இறக்குமதிச் செலவினமானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றை பதிவுசெய்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2022 ஓகத்தில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு 2022 ஓகத்தில் அரசாங்கம் அவசரமற்ற இறக்குமதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை இறுக்கமாக்கிய போதிலும் பின்னர் 2022 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் பகுதியளவில் தளர்த்தப்பட்டன. அதேவேளை, ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 ஓகத்தில் அதிகரித்து 2022 ஏப்பிறல் தொடக்கம் … Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்- முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுமாறு மீண்டும் அழைப்பு .

    அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விசேட உரையொன்றை நிகழ்த்தினார். … Read more

ஃபேஸ்புக் :உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய நபர் ,மன்னிப்புக் கோரினார்

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் (ஒக். 04) அழைக்கப்பட்டிருந்தார். நீதி, சிறைச்சாலை … Read more

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடுத்துள்ள சர்வதேச ஆசிரியர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில்: உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.   ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் கலவையாகும். ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் அல்ல. … Read more

பல்கலைக்கழகம் சார்ந்த அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ,அரசாங்கத்தின் பொறுப்பாகும்!

தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் தற்போது இடம்பெறுகின்றன.பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது.  முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி, மாலை ஆகியவற்றை அணியக் கூடாதென சில மாணவர்கள் … Read more

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு கடந்த ஐந்து வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். இலங்கை விண்ணப்பதாரர்களுக்கு கனேடிய விசாக்கள் கிடைப்பதற்கு ஏற்படும் தாமதம் குறித்து வினவியபோதே கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று, தொற்று நோய்க்கு பின்னர் ஏற்பட்ட தேவைகளின் அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் ஆகிய காரணங்களே இந்த அதிகரிப்புக்கு காரணம் … Read more