ஏரியில் மிதந்த குழந்தையின் சடலம்; போலீஸில் சிக்கிய தாய்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகேயுள்ள ஏரிப் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து ஏரியில் பச்சிளம் குழந்தையை வீசியது யாரென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை ஏரிக்குள் வீசியது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (26) எனத் … Read more