`தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்தால் அதிக லாபம்'- 30 பேரிடம் 490 சவரன் நகை மோசடி செய்த கும்பல்!
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதன்குமார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கிரேனா, சுந்தரலிங்கம் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி, பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்து அந்தப் பணத்தை பங்குச்சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக மதன்குமாரிடம் கூறியிருக்கின்றனர். ஜெயலெட்சுமி, கிரேனா, பாக்கியராஜ் அத்துடன், 10 சவரன் தங்க நகை கொடுத்தால் 10 … Read more