எஃப்.ஐ.எச்.புரோ லீக் ஹாக்கி போட்டி – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா,  தென்னாப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுதடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.  இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் குர்சாஹிப்ஜித் சிங் ,தில்ப்ரீத் சிங்  ஹர்மன்பிரீத் சிங் , அபிஷேக் , … Read more

பிப்-10: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

புதுச்சேரி கலால் வருவாய் 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது| Dinamalar

புதுச்சேர-புதுச்சேரி கலால் வருவாய், முதல் முறையாக 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடைகள்-50, சாராயக்கடைகள்-80, மதுபான கடைகள்-284 என மொத்தம் 414 கடைகள் உள்ளன.மாநிலத்தின் வருவாய், கலால் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல், கலால் வருவாயை பெரிதும் பாதித்தது.கடந்த 2019-20 ம் ஆண்டு கலால் வருவாய் 857 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 81.70 கோடி ரூபாய் அளவிற்கு சாராயம் விற்பனையாகி இருந்தது. 2020-21 ம் ஆண்டில் கொரோனா தொற்று … Read more

கர்நாடகாவில் புதிதாக 5,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று புதிதாக 5,339 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,12,100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,495 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 16,749 பேர் கொரோனா … Read more

சீனாவுக்கு வேலையை கொடுத்து விட்டு விற்பனை மட்டும் இந்தியாவிலா.. இது என்ன நியாயம்..!

சீனாவில் வேலைகளை உருவாக்கி விட்டு, இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது டெஸ்லா என குற்றம் சாட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, உலகம் முழுவதும் தனது விற்பனையை செய்து வருகின்றது. விற்பனை மையங்களையும் உருவாக்கி வருகின்றது. 2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan குறிப்பாக இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது. வரியை … Read more

போட்டியின் போது கத்திய ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆக்ரோஷமாக பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.  அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  😂😂👌pic.twitter.com/wI0fRFhZm9 — Russell Muscle (@45_Anonymous_18) February 9, 2022 முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் … Read more

விக்ரமின் ‘மகான்’ இன்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியாகிறது….

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். From tonight #Mahaan will be all yours ❤️ #Mahaan streaming from tonight on @PrimeVideoIN 🔥#MahaanOnPrime pic.twitter.com/gea1qcz2ko — Seven Screen Studio (@7screenstudio) February 9, 2022 இந்தப் படம் அமேசான் ப்ரைமில் இன்று இரவு … Read more

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  துணை ஆணையர் தலைமையில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை … Read more

வறட்சி மாநிலம்: நாகாலாந்து அறிவிப்பு| Dinamalar

கோஹிமா : பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பயிர்கள் வாடி பாழ்பட்டுள்ள விவசாய நிலங்களை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், செப்., 2021 முதல், மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களை, மாநிலம் முழுதும் மிதமான வறட்சி பாதித்த காலமாக, மாநில … Read more

விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், நான் விவசாயிகளின் மனதில் இடம்பிடிக்க வந்தேன். அவர்களின் மனதில் நான் இடமும் பிடித்துவிட்டேன். சிறு விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது என நான் கூறினேன். ஆனால், அந்த வேளாண் சட்டங்களும் நாட்டு நலனை கருத்தி கொண்டு திரும்பப்பெறப்பட்டது. மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக எப்போதும் முனைப்பாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் … Read more