பெலாரஸில் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை  நடத்த உக்ரைன் ஒப்புதல்?

கீவ் பெலாரஸில் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக அமைதியின்மை நிலவி வந்தது.   உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனில் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.  ரஷ்யாவின் விமானப்படை தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அழிக்கப்பட்டன  இதனால் அங்குள்ள வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேற … Read more

உக்ரைன் விவகாரம்: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

பிப்-28: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல.| Dinamalar

காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடையிலான பனிப்போர் நடக்கிறது. இவர்களுக்கிடையே, குமாரசாமி சிக்கிக்கொண்டுள்ளார். ஆட்சியில் இருந்த போது, எதையும் செய்யாத காங்கிரசாரை, பச்சாதாபம் வாட்டி வதைக்கிறது. இந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, பாதயாத்திரை நடத்துகின்றனர். சித்தராமையா, சிவகுமார் மோதலை மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்குள் நாங்கள் சண்டை மூட்ட வேண்டிய அவசியமே இல்லை.கோவிந்த் கார்ஜோள், அமைச்சர், நீர்ப்பாசனத்துறை காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் … Read more

உக்ரைனில் உச்சகட்ட போர்: இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!!

புதுடெல்லி,  ரஷியா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்தது.  இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷியா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஹங்கேரி மறுப்பு தெரிவித்துள்ளது. ஹங்கேரி ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தேவைப்படுவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். “ஹங்கேரிய ஆயுதப் படைகளுக்கு நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அவர்களின் அனைத்து ஆயுதங்களும் தேவைப்படுவதால், ஹங்கேரி தனது நிலையை மாற்றிக்கொள்ளாது. எனவே, இத்தாலி மற்றும் ஜேர்மனியைப் போலல்லாமல், நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்” என்று பிரதமர் விக்டர் ஓர்பன் M1 ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். அதே … Read more

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் புதிய பொலிவு பெறுகிறது

2011 உலக கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்த மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டிடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு அதனை இடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஐ, ஜெ, கே ஆகிய காலரிகள் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி பார்வையாளர்களை அனுமதிக்க அரசு தடை விதித்தது. இதனால் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்தது. … Read more

உக்ரைன்-ரஷியா பேச்சு வார்த்தையை வரவேற்கிறோம்: ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா தகவல்

நியூயார்க் : ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.   இந்த சிறப்பு கூட்டத்தில் இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: பெலாரஸ் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பினரும்(ரஷியா-உக்ரைன்) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், அனைத்துப் பகைமைகளுக்கும் இரு நாடுகளும் முடிவு கட்ட வேண்டும் என்ற எங்களின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்.  ரஷியா … Read more

பாதயாத்திரை சென்றால் சிவகுமார் முதல்வரா? சிவகுமாருக்கு மத்திய அமைச்சர் கேள்வி| Dinamalar

பெங்களூரு : ”பாதயாத்திரை நடத்துவதால் முதல்வராகி விடுவோம் என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் நினைக்கிறார்,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:காங்கிரசாருக்கு தர்ணா, பாதயாத்திரை, சத்யா கிரகம் நடத்தும் சக்தியை, கடவுள் அளிக்கட்டும். வரும் நாட்களிலும், எதிர்க்கட்சி இடத்தில் அமரட்டும். மேகதாது மட்டுமின்றி, மகதாயி திட்டத்துக்காகவும், போராட்டம் நடத்த காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். பாத யாத்திரை நடத்தி, சித்தராமையா முதல்வரானார். அதே போன்று நடத்தினால், தானும் முதல்வராவோம் என்பது, சிவகுமாரின் எண்ணம். … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய புதிய டுவிட்டர் பக்கம் உருவாக்கம்!

புதுடெல்லி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக  புதிதாக டுவிட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பக்கத்தில்,  உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் விமான சேவை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த புதிய டுவிட்டர் பக்கத்திற்கு  ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’  என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி தெரிவித்தார்.  … Read more