நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இரு அவைகளிலும் விவாதங்கள் தொடங்கின. மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி சமலா கிரன் குமார், “குழந்தைகள் நலக் குறியீட்டில் முதல் 50 நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். … Read more

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்… இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் – முழு விவரம்

Bullet Train Chennai – Mysore: சென்னை – மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடிக்கு முதல்வர் பினரயி விஜயன் கடிதம் எழுதியதாகவும், அதில், தன்னால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும், தனக்குப் பதிலாக மாநில நிதியமைச்சர் கே.பி.பாலகோபால் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்ததாக … Read more

“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” – பிரியங்கா காந்தி ஆவேசம்

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் என அனைவரும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது. வெறுப்பு மற்றும் வன்முறையில் … Read more

கடந்த 5 ஆண்டுகளில் யானை – மனித மோதலில் 2,500+ பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை – மனித மோதல்களில் 2,853 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: யானைகள் தாக்கி, கடந்த 2019-ம் ஆண்டு 587 பேரும், 2020-ம் ஆண்டு 417 பேரும், 2021-ம் ஆண்டு 557 பேரும், 2022-ம் ஆண்டு … Read more

அசாமின் அஹோம் வம்சத்தின் ‘மொய்தாம்கள்’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் அஹோம் வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடுகள்) இந்தியாவின் 43-வது உலக பாராம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த 46-வது உலக பாரம்பரிய குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த மொய்தாம்கள் இந்தியாவின் பிரமிடுகள் என்று அழைக்கப்படுவதும் உண்டு. 2023-24- ஆம் ஆண்டுகான யுனஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கு இந்தியாவின் சார்பில் மொய்தாம்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த அறிவிப்பின் மூலம், கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் … Read more

“கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை” – பிரதமர் மோடி

டிராஸ்: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி பேசினார். கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் … Read more

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!

ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   

கார்கில் வெற்றி நினைவு தினம்: இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம்

டிராஸ்: கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். முன்னதாக பிரதமர் மோடி நேற்று எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் இந்தியாவின் துணிச்சல் மிக்கவர்களின் வீரக் கதையை நம் கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் … Read more

அமித் ஷாவுடன் அஜித் பவார் சந்திப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிஆகியவை இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக வரும் 28-ம் தேதியும் இவர்கள் சந்தித்து பேச … Read more