ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. … Read more

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

புதுடெல்லி: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில் இருந்ததாகவும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வரும் உறவினர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை (25 வயது), அவரது தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் … Read more

“பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம்; நம்மால் முடியாது” – பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பிரதமர் தனது விமானத்தில் பறக்கும்போது, ​​அவர் கீழே பார்த்து, ‘அது எந்த நாடு?’ என்று கேட்பார். அது எந்த நாடு என்பதைக் கூறுவார்கள். ​​‘கவலைப்பட வேண்டாம், நாம் செல்லும் இடத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் … Read more

மூத்த குடிமக்களுக்கு முக்கிய அப்டேட்.. ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டத்தின் 15 அம்சங்கள்

PM-JAY Insurance Scheme Key Feature: மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் வரை ரூபாய் வரை காப்பீடு பெறலாம். அதன் சிறப்பம்சம் குறித்து முழு விவரமும் கொடுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே

புவனேஸ்வர்: நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “மத்தியிலும் ஒடிசாவிலும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, ​​இங்கு பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்டிபிசி, நால்கோ, பாரதீப் துறைமுகம், ஹிராகுட் அணை, ரூர்கேலா எஃகு ஆலை, சில்கா கடற்படை அகாடமி, மஞ்சேஸ்வரில் ரயில் … Read more

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரல்

Kerala Accident Latest News: ஓமசேரி-திருவம்பாடி சாலையில் தரோலில் பேருந்தும் லாரியும் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். “யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை” என்று முக்கோம் காவல் நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மகாராஷ்டிராவை போல பிஹார் தேர்தலையும் 'திருட' பாஜக முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. அது, ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது. முன்பு பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே … Read more

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக கார்ட்டூன் வரைந்த நபர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ஆட்சேபகரமான கார்ட்டூனை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா-வுக்கு எதிராக வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான வினய் ஜோஷி என்பவர், இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஹேமந்த் மாளவியாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வினய் ஜோஷி … Read more

“75 வயதில் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்” – மோகன் பாகவத் கருத்தை முன்வைத்து மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

புதுடெல்லி: “75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்,” என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மறைந்த மோரோபந்த் பிங்களே குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். மிகவும் நகைச்சுவையுடன் பேசக்கூடிய … Read more

'75 வயதானதும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்' மோடியை சொல்கிறாரா மோகன் பகவத்!

RSS Leader Mohan Bhagwat: 75 வயதானவுடன் தலைவர்கள் ஓய்வுபெற்று மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார்.