பிரதமரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இளைஞர் காலமானார்… யார் இந்த Atheist கிருஷ்ணா?

Atheist Krishna Passed Away: பிரதமர் மோடியை மனதார சிரிக்கவைத்தவராக அறியப்படும் மீம் கிரியேட்டர் கிருஷ்ணா இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மக்களவையில் சபாநாயகரும், … Read more

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங்

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இந்த அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களின் வரவு பார்க்​கப்​படு​கிறது. அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனத்​திட​மிருந்து இந்​திய ராணுவத்​துக்கு 6 அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை வாங்​கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாது​காப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​தது. இதற்​காக, இந்​திய அரசு மற்​றும் போ​யிங் நிறு​வனத்​துக்கு இடையே ரூ.4,618 கோடிக்​கான ஒப்​பந்​தம் … Read more

எரிபொருள் சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், ‘‘அனைத்து போயிங் விமானங்​களி​லும் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் அமைப்​பு​களை ஆய்வு செய்​து​விட்​டோம். இதில் எந்​தப் பிரச்​சினை​யும் கண்​டறியப்​பட​வில்​லை’’ என ஏர் இந்​தியா … Read more

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் … Read more

ரூ.50 லட்சம் பரிசுத்தொகை… போட்டியை அறிவித்த மாநில அரசு – எதற்கு தெரியுமா?

Delhi Air Pollution: BS-IV வாகனங்களின் காற்று மாசுபாட்டை குறைக்க பயனளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும்பட்சத்தில் ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவிப்பு.

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக ஜெகதீப் தன்​கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்​தது. இந்​நிலை​யில் தன்​கர் நேற்று முன்​தினம் திடீரென தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். ராஜி​னாமா கடிதத்தை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு அவர் அனுப்பி வைத்​தார். ‘‘உடல்​நலனுக்கு முன்​னுரிமை அளித்​தும் மருத்​துவ ஆலோ​சனைக்கு கட்​டுப்​பட்​டும் அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 67(ஏ) பிரி​வின் கீழ் குடியரசு துணைத் … Read more

ஹைட்ராலிக் கோளாறால் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் தாயகம் புறப்பட்டது

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதனை சரிசெய்ய இங்கிலாந்து ராயல் விமானப் படையைச் சேர்ந்த 25 பொறியாளர் சிறப்பு உபகரணங்களுடன் அட்லஸ் விமானத்தில் கிளம்பி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் விமானத்தின் ஹைட்ராலிக் குறைபாடு பொறியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து, 37 நாட்கள் திருவனந்தபுரம் விமான … Read more

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை

புதுடெல்லி: நம்பியோ தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் பின்னணி பற்றியும் இந்திய … Read more