நீதிபதி வர்மா வீட்டில் பணக்கட்டுகள் இருந்தது உண்மை: விசாரணைக் குழு அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி வர்மாவின் டெல்லி இல்ல கிடங்கில் அதிக அளவில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, கடந்த மார்ச் 14-15 அன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், கிடங்கினுள் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்ததைக் … Read more

அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம் அமைகிறது. 150 வருட கால தொழிலை அங்கீகரிக்கும் வகையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார். இந்தியாவின் பூட்டுகளின் நகரமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் கருதப்படுகிறது. இந்நகரம் டெல்லிக்கு 150 கி.மீ தொலைவில் மிக அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அலிகர் நகரில் முஸ்லிம் கைவினை கலைஞர்கள் அதிகம் இருந்தனர். இதனால், அரசின் கோப்புகளை பாதுகாக்க வேண்டி பெரிய அளவிலான தகரம் மற்றும் இரும்பு … Read more

Kerala Lottery: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் பிற்பகல் 3 மணிக்கு.. 1 கோடி யாருக்கு?

Kerala Lottery Karunya Plus KN-577 Result: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது.

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன கொள்கை கைவிடப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் … Read more

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது யார்?’ – பிரதமர் மோடியை சாடிய ப.சிதம்பரம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார். இதன் பின்னர் ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் கூறி இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த … Read more

பிஹாரில் குழந்தை திருமணம் சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டிராக்டர் ஒருவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய்மாமன் உதவியுடன் தாய் வீட்டுக்கு அந்த சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் கணவர் வீட்டில் தன்னை கொடு மைப்படுத்துகிறார்கள் என்று கூறி, தனது நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். … Read more

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: ஈரானிலிருந்து அர்மீனியா வழியாக தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் ஈரானில் உள்ள உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். இவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர வேண்டும் என இவர்களின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து … Read more

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.36,000 உதவித்தொகை! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child: இந்திரா காந்தி உதவி தொகை திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 36, 200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு: மத்திய அரசு, போலீஸ், டாடா நிறுவன குழுக்கள் தீவிர விசாரணை

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட போயிங் விமானம் சில நிமிடங்களில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி தவிர விமானத்தில் இருந்து 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் பிஜே அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. … Read more

ரூபாய் 3000 பாஸ் திட்டம்! எத்தனை முறை டோல்கேட்டை இலவசமாக கடக்கலாம்?

FASTag Rs. 3000 Pass: இந்தியாவில் உள்ள டோல்கேட்டுகளில் ரூபாய் 3000 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால் 200 முறை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.