போபால் விஷவாயு கசிவு வழக்கு – கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனம் என்ற கெமிக்கல் தொழிற்சாலையில் இந்த பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 1989-ம் ஆண்டு இழப்பீடு வழங்கப்பட்டது. யூனியன் கார்பைட் … Read more

ஆஸ்கர் விருது பெருமையை பாஜ அபகரித்து விடக்கூடாது: கார்கே பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை

புதுடெல்லி: இந்திய திரைப்படங்கள் 2 ஆஸ்கர் விருது வென்ற பெருமையை பாஜ அபகரித்து விடக்கூடாது, மோடி தான் படத்தை இயக்கினார் என்றெல்லாம் சொல்லி விடக் கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதால் மாநிலங்களவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ தமிழ் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் படக்குழுவினரை பாராட்டி … Read more

இனி ரீல்ஸ் வீடியோ எடுக்க தடை..! எங்கு தெரியுமா ?

இந்தியாவில் ரீல்ஸ் எனப்படும் டப்ஸ் மேசில் பிரபலமடைந்த ஒரு செயலிதான் டிக் டாக். இது இந்தியாவில் பல மில்லியன் பயனர்களை கொண்டு இயங்கி வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோஜ், டாக்கா டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் டிக் டாக்கிற்கு மாற்றாக களமிறக்கப்பட்டன. இந்த செயலிகள் மூலம் பொது இடங்களில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வது இளசுகளின் … Read more

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம் – ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்

ஸ்டாக்ஹோம்: சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு … Read more

ரயில்வே வேலை விவகாரம் 3வது முறையாக சிபிஐ முன் ஆஜராக தேஜஸ்வி மறுப்பு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மறுத்து விட்டார். ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதைத் தொடந்து, அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.  லாலு பிரசாத் யாதவிடம்  சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி 5 மணி நேரம் … Read more

பெங்களூரு ரயில் நிலையங்களில் 3-வது முறையாக இளம்பெண் சடலம் – ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலைய‌த்தில் நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூரு ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சவும்யா லதா சம்பவ இடத்துக்கு வந்துசடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். ரயில் நிலையம், அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாலை 7.30 மணியளவில் ஆட்டோவில் வந்த 3 பேர் இந்த பிளாஸ்டிக் … Read more

போபால் விஷவாயு வழக்கு கூடுதல் இழப்பீடு கோரிய ஒன்றிய அரசின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: போபால் விஷவாயு விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய ஒன்றிய அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984ல் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் (யுசிசி) நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் இருந்தது. இதன் தொழிற்சாலையில் இருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டு, 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, 470 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான … Read more

பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இதையடுத்து இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனில் இந்திய நாடாளுமன்றம் குறித்து தவறாகப் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த … Read more

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அரசு தொல்லை தருகிறது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அரசு தொல்லை தருகிறது என்று மார்க்சிஸ் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதற்காக அமலாக்க இயக்குநரகம், சிபிஐயை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே எந்த பிளவும் இல்லை. அதே சமயம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து … Read more

வேகமாக பரவும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத் பெண் பலி

வதோதரா: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எச்3என்2 எனப்படும் இன்புளூயன்சா  வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோரை அதிகளவில் தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், `ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் … Read more