அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா

புதுடெல்லி: இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. … Read more

ராஜா ரகுவன்சியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு

போபால்: ராஜா ரகுவன்சியை கொலை செய்ய குவாஹாட்டியில் இருந்து ஆயுதம் வாங்கியது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ரகுவன்சியும் அவரது மனைவி சோனமும் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து ரகுவன்சியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் சோனம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக விஷால் சவுகான் என்பவர் … Read more

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பகுதியில் பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை

ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் “பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளிலும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக … Read more

வாக்குப்பதிவை கண்காணிக்க வாக்குச்சாவடிகளில் வெப்​-காஸ்டிங் அறிமுகம்

புதுடெல்லி: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவைக் கண்காணிக்க வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் (இணையவழி மூலமாக நேரலை) முறையை அறிமுகம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க பல்வேறு முறைகளை தேர்தல் ஆணையம் கையாண்டு வருகிறது. தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வீடியோ செய்தல் போன்ற பல்வேறு நடைமுறை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் இணையவழி நேரலை எனப்படும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஹனிமூன் கொலைக்கு பிறகு மேகாலயாவில் புதிய தடை

ஷில்​லாங்: மேகாலயாவில் தேனிலவின்போது இந்தூர் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் … Read more

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பானாவர்கள் … Read more

உ.பி.யில் தந்தை, மகனுக்கு ஒரே நேரத்தில் காவலர் பணி: சாத்தியமானது எப்படி?

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் பணிக்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், தந்தையும், மகனும் ஒரே சமயத்தில் காவலர் பணி பெற்றுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ளது ஹாப்பூர். இங்குள்ள தவுலானா பகுதியின் உதய்பூர் நங்லா கிராமத்தில் தந்தையான யஷ்பால் பவுஜி (40), தன் மகன் சேகர் நாகருடன் (19) வசிக்கிறார். யஷ்பால் தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர். இவர் 16 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். … Read more

உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?

புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் … Read more

இனி ரூ. 3000 செலுத்தினால் போதும்.. நாடு முழுக்க பயணம் செய்யலாம்.. வெளியாக முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பயணிகளுக்கான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை இந்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜூன் 18) அறிவித்தார்.

பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜின்: பிரதமர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பாட்னா: பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியன் ரயில்வேஸ் தனது வருவாயை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவுக்கு ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்ய உள்ளது. பிஹாரின் சரண் மாவட்டம், மர்ஹோராவில் உள்ள டீசல் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி … Read more