உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு டெல்லி துணை முதல்வர் மீது சிபிஐ வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: துணை முதல்வர் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய  சிபிஐ.க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிய, கடந்த 2015ம் ஆண்டு ‘கருத்து கேட்பு குழு’வை அமைத்தது. இக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இந்த குழுவின் மூலமாக ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உளவு … Read more

ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள்

திருமலை: ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக, இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு விஐபி டிக்கெட் ரூ.500 கட்டணத்தில் அனுமதிக்கப்படும். திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கும் … Read more

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மோடி புத்தகம் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ‘தேர்வு வாரியர்ஸ்’ புத்தகத்தை பள்ளி நூலகங்களில் இடம் பெறச் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள் அடங்கிய புத்தகம் ‘தேர்வு வாரியர்ஸ்’  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அனைத்து பள்ளி நூலகங்களில் கிடைக்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் இது தொடர்பாக … Read more

மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ராஜீவ் சிங் ரகுவன்ஷி நியமனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தரமான மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பை வகிக்கும் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) தலைமை தாங்குகிறார். புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிப்பது, அதன் மருத்துவ ஆய்வுகளுக்கு அனுமதி தருவது ஆகியவை டிசிஜிஐயின் பொறுப்பாகும். டிசிஜிஐ ஆக பொறுப்பு வகித்த வி.ஜி.சோமணியின் பதவிக்காலம் கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய டிசிஜிஐ ஆக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் செயலாளரும் அறிவியல் இயக்குநருமான … Read more

நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமரா: உச்ச நீதிமன்றம் புதிய கெடு

புதுடெல்லி: நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கடந்த 2020ம் ஆண்டு … Read more

ஜார்கண்ட்டில் பறவை காய்ச்சல் கோழி, வாத்து கறி விற்பனைக்கு தடை

ராஞ்சி: ஜார்கண்ட்டில் அரசு பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லோஹாஞ்சலில் உள்ள அரசுக்கு சொந்தமான கோழிப்பண்யைில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ‘கடக்நாத்’எனப்படும் புரதம் நிறைந்த கோழிகளில் எச்5என்1 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பண்ணையில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துவிட்டன. இதனை தொடர்ந்து இங்கிருந்து 1கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10கி.மீ.சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் கோழி … Read more

மேகாலயா தேர்தல் 2023: வாக்குகளை பிரிக்கும் மம்தா; ராகுல் காந்தி சாடல்.!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகாலயாவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாஜக, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 … Read more

அதானி உடனான தொடர்பு குறித்து பிரதமர் பதில் கூறாதது ஏன்?: மேகாலயாவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் சாடிய ராகுல்

ஷில்லாங்: ஒவ்வொரு மாநிலத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்கி வருகிறது என்றும் ஒரே சித்தாந்தம் அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தலைநகர் ஷில்லாங்கில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். கர்நாடகாவில் சட்டமாக்கப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்ட மசோதா மற்றும் முண்டர்கள் மூலமாக தாக்குதல் வழியாக சமூக பிளவை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக … Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

சென்னை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!!

நீண்ட இழுபறிக்கு பிறகு நடைபெற்ற டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகாரட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநாகாரட்சி பாஜக வசம் இருந்த நிலையில், அதை ஆம் ஆத்மி தட்டிப்பறித்தது. … Read more