பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் செல்போன் பாதுகாக்க திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். … Read more

சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன. இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, … Read more

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட … Read more

ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவதால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள மற்ற குடியிருப்பாளர்களும் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு … Read more

உ.பி உடன் ஈரானின் கோமெய்னிக்கு தொடர்பு: 19-ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த மூதாதையர்!

புதுடெல்லி: ஈரானில் மறைந்த பெரும் தலைவர் அதிபர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னிக்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பி.யின் பாராபங்கியின் கிராமத்திலிருந்து அவரது மூதாதையர் 19-ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 70-களின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அந்நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு காரணமாக இருந்தவர் இந்த ருஹோல்லாதான். தற்போது, இஸ்ரேலுடன் ஈரானுக்கு நடைபெறும் போருக்கு இடையே கோமெய்னி ஒரு வெளிநாட்டவர் எனும் சர்ச்சை … Read more

“வகுப்புவாத சக்திகளை பாதுகாக்க விரும்புகிறார் ராகுல் காந்தி” – அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். பக்ரித் பண்டிகையை ஒட்டி கடந்த 8-ம் தேதி அசாமின் பல இடங்களில் பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், அதன் மாமிசத் துண்டுகள் சில கோயில்களில் வீசப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக துப்ரி நகரில் 50 பேரையும், கோல்பாராவில் ஐந்து பேரையும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் … Read more

சோனியா காந்தி உடல்நலம் தேறி வருவதாக டெல்லி மருத்துவமனை தகவல்

புதுடெல்லி: வயிற்றுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நல பாதிப்பு தொடர்பாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததை அடுத்து, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லி … Read more

ஏர் இந்தியாவின் அகமதாபாத் – லண்டன் விமானம் ரத்து: காரணம் என்ன?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு AI-159 என்ற விமானம் இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. “AI-171 என்ற எண் … Read more

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை செல்கிறீர்களா ? முக்கிய உத்தரவு.. மக்களே எச்சரிக்கை

Amarnath Yatra 2025 Guidelines: ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அனைத்து அமர்நாத் யாத்திரை வழித்தடங்களையும் ‘டிரோன்கள்  மற்றும்  பலூன்கள் பறக்க தடை மண்டலம்’ என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162 கோடி செல​வில் சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. அதில் மக்​களின் சமூக, பொருளா​தார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்​டப்​பட்​டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதனை ஏற்​ற​தாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அதற்கு ஒக்​கலி​கா, லிங்​கா​யத்து போன்ற சாதி​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அதன் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் கர்​நாடக … Read more