ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் இந்திய விமானப் படை உரையாற்றுவது இதுவே முதல்முறை. பஹல்காமில் தாக்குதல் நடந்த மறுநாள், மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து … Read more

இமாச்சல் மணிமகேஷ் யாத்திரையில் கனமழையால் 10 பக்தர்கள் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் யாத்திரை இந்த ஆண்டு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்றும், நான்கு பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணமாக மணிமகேஷ் யாத்திரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிம்லாவில் ஊடகங்களிடம் பேசிய இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறப்புச் செயலாளர் … Read more

ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அமராவதியை இணைக்கும் புல்லட் ரயில்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “மிக விரைவில், தென்னிந்தியாவிற்கு புல்லட் ரயில் வர உள்ளது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும். ஐந்து கோடிக்கும் … Read more

100+ ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டிய 'மனித ஜிபிஎஸ்' தீவிரவாதி பாகு கான் சுட்டுக் கொலை!

ஜம்மு: பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று அழைக்கப்படும் பாகு கான், ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் பாகு கான், பாதுகாப்புப் படையினரால் இன்று (சனிக்கிழமை) குரேஸில் சுட்டுக்கொல்லப்பட்டார். சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தவர். ஊடுருவல் முயற்சிகளுக்கு நீண்ட காலமாக … Read more

நீட் பயத்தால் விபரீத முடிவெடுத்த மாணவி..பாய்ந்து வந்து உயிரை காப்பாற்றிய ஆசிரியர்!

NEET Student Saved By Student : ஒரு மாணவி, நீட் பயத்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் ஆசிரியை தகுந்த சமயத்தில் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்.  

''இந்தியா ஒருபோதும் தலைவணங்காது'' – அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதிலடி

புதுடெல்லி: இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது என்று அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது. நாங்கள் தொடரந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம். அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஒவ்வொரு துறையையும் ஆதரிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வரும் நாட்களில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவிக்கும். … Read more

இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே முக்கியம்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய ராஜ்நாத் சிங், “ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி உள்ளிட்ட இரண்டு நீலகிரி-வகை ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையின் வெளிச்சத்தில், நாடு இப்போது அனைத்து போர்க் கப்பல்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. கடற்படை வேறு எந்த நாட்டிலிருந்தும், போர்க்கப்பல்களை வாங்குவதில்லை, அவற்றை … Read more

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி: ஆர்சிபி அறிவிப்பு

புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்சிபி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம், … Read more

ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய தபால் துறை ரத்து செய்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு கடந்த புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு … Read more

ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு – காஷ்மீரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு … Read more