விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நீண்ட நாள் சோனம் தலைமறைவாக இருக்க ஆன்லைனில் மளிகை ஆர்டர் செய்த காதலன்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் தலைமறைவாக இருந்தபோது ரூ.5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோனம்-ராஜா ரகுவன்சி திருமணம் கடந்த மே 11-ம் தேதி நடைபெற்றது. மே 20-ல் தேனிலவு கொண்டாட … Read more

பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது … Read more

குஜராத் விமான விபத்து வீடியோவை தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழப்பு ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும்: ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் அம்மநில சுற்றுலாத் துறை கடுமையாக … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்கு இணைந்த கைகள்

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த … Read more

‘இன்ஃப்ளூயன்சர்களே… தயவுசெய்து நிறுத்துங்கள்!’ – விமான விபத்தில் உறவுகளை இழந்தோர் வேண்டுகோள்

புதுடெல்லி: கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் நகரில் நிகழ்ந்த விமான விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்து உயிரிழந்த மருத்துவர் கோமி வியாஸின் உறவினரான குல்தீப் பாட் என்பவர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “எங்களை போலவே இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தருணம். இந்த சூழலில் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் தங்கள் பக்கத்துக்கு லைக்ஸ், வியூஸ் … Read more

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. மேலும், குஜராத் அரசு இன்று (திங்கட்கிழமை) மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் இறந்துவிட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. மேலும், … Read more

அகமதாபாத் விமான விபத்து: முன்னாள் விமானி கூறும் ஷாக் தகவல்!

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பலரும் பல தகவல்களை கூறி வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் சில முக்கிய காரணங்களை தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்று, மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் எங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை; சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த … Read more