'எங்களால் முடிந்தது; உங்களால் முடியாதா?' – சமாஜ்வாடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மம்தா!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள … Read more

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி <!– உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க… –>

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் கடந்த 6-ந் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த முன்மொழிவுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு … Read more

ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல் – முதல் முறையாக அம்பானியை முந்தினார் அதானி

புதுடெல்லி: அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முதல் முறையாக முந்தியுள்ளார் கவுதம் அம்பானி என தெரிவித்துள்ளது. கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. கிட்டதட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.  முதலிடத்தில் நீடித்து வந்த … Read more

ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் சர்ச்சை ட்வீட் பதிவிட்டிருந்தார்.

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை 'டிக்' செய்ததால் காங்கிரஸ் கரைசேருவது கடினமா? – ஒரு பார்வை

புதுடெல்லி: ”பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியது காங்கிரஸுக்கு இழப்பைத் தரும்” என்ற கருத்தை, பஞ்சாப் பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற சமூக அறிவியல் பேராசிரியரான மன்ஜித் சிங் முன்வைத்துள்ளார். இது குறித்து பேராசிரியர் மன்ஜித்சிங் கூறும்போது, “பஞ்சாபில் 32 சதவிகிதம் உள்ள பட்டியலினத்தவர்களில் 39 வகையானப் பிரிவுகள் உள்ளன. இவர்களது வாக்குகளை முழுமையாகப் பெற காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்கு, இந்த சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டாகப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் … Read more

UP BJP Manifesto 2022: இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மட்டும் அரசு பேருந்தில் இலவச பயணம், * கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட … Read more

கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு மூலம் எல்லை கண்காணிப்பு <!– கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு … –>

உத்தரகாண்டில் கொட்டும் பனிக்கு மத்தியில் பனிச் சறுக்கு மூலம் வீரர்கள் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா, சீன எல்லைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கால் மூட்டு அளவுக்கு கொட்டிக் கிடக்கும் பனியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச்சறுக்கு மூலம் அதிக இடங்களை கண்காணிக்க முடிவதாகவும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சறுக்கில் ஈடுபட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக … Read more

ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை தாக்கி சிறுமி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தன்சிறாவை சேர்ந்தவர் நிகில் (வயது 35). நிகிலின் தாயார் இறந்து அவரது ஈமச்சடங்குகள் ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள நிகில், அவரது 5 வயது மகள் அக்னிமியாவுடன் சென்றார். இவர்களுடன் நிகிலின் தந்தை ஜெயனும் இருந்தார். மூவரும் நீர்வீழ்ச்சியை அடுத்துள்ள காட்டுபகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து திடீரென யானை … Read more

சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி சாடல்..!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நூறாண்டுகளில் மனிதகுலம் கொரோனாபோன்ற ஒரு தொற்று நோயை பார்த்ததில்லை. கொரோனா பரவ துவங்கிய போது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெருந்தொற்று காலத்தில், இந்தியா தலைமைப்பண்புடன் செயல்பட்டது. … Read more

என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வாவா சுரேஷ் பேட்டி

கோட்டயம்: கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார். ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ நாகம் தீண்டியது. இதனால் அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை … Read more