பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!

ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   

கார்கில் வெற்றி நினைவு தினம்: இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம்

டிராஸ்: கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். முன்னதாக பிரதமர் மோடி நேற்று எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் இந்தியாவின் துணிச்சல் மிக்கவர்களின் வீரக் கதையை நம் கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் … Read more

அமித் ஷாவுடன் அஜித் பவார் சந்திப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிஆகியவை இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக வரும் 28-ம் தேதியும் இவர்கள் சந்தித்து பேச … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஆசானாக மாறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடம் நடத்தினார்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புவி வெப்பமடைதலின் தாக்கம், தண்ணீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடங்களை மகிழ்வுடன் நடத்தினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு. கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி நாட்டின் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற வரலாற்றைப் படைத்தார். நேற்றுடன் அவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் … Read more

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடுமையான அமளி நீடித்தது. இருஅவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த23-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பட்ஜெட் மீதானவிவாதம் தொடங்கியது. அன்றையதினம் நடைபெற்ற விவாதத்தில், “மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் … Read more

ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த 1,600 பயணிகளுக்கு அபராதம்: டெல்லி மெட்ரோ நடவடிக்கை

புதுடெல்லி: பொது இடங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. இதில் மெட்ரோ ரயில் நிலையவளாகத்திலும், ரயில் பெட்டிக்குள்ளும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பயணம் செய்வது, பயணத்தின்போது சாப்பிடுவது உள்ளிட்ட சக பயணிகளுக்கு தொல்லைகொடுக்கக்கூடிய செயல்களை செய்து வந்த 1,647 பேர் மீது மெட்ரோ ரயில் சட்டப்பிரிவு 59-ன்கீழ் வழக்கு பதிவு செய்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. கடந்த … Read more

வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் வங்கதேச அரசு மிகச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது. எல்லையை கடந்து வருவதாக இருந்தாலும் சரி, விமான நிலையம் சென்று விமானத்தின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி இந்தியர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

“ஜெகனுக்கு அம்பானியை விட பணக்காரர் ஆக ஆசை!” – ‘டான்’ உடன் ஒப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேச்சு

அமராவதி: ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு சட்டப்பேரவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசை கண்டித்து டெல்லியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று போராட்டம் நடத்தினார். “ஆந்திராவில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. … Read more

வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு

புதுடெல்லி: வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மாநிலங்களவையில் இன்று (ஜூலை 25) எழுத்து மூலம் அளித்த பதிலில், “மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு … Read more

தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்.பி மனு

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது, இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார். இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வழங்கிய மனுவில், ‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக … Read more