நீட் முடிவுகள் 2024: சிகார், நாமக்கல், கோட்டா ‘பயிற்சி மையங்கள்’ அதிக மதிப்பெண்களுடன் ஆதிக்கம்

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் சிகார், நாமக்கல், கோட்டா நகரங்களில் செயல்படும் ‘பயிற்சி மையங்களில்’ படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. இளநிலை நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720. இதில் 650-க்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்த வகையில் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களாக ராஜஸ்தானின் சிகார், … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘தர்பார் ஹால்’ இனி ‘கணதந்திர மண்டபம்’!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹால் உள்பட இரண்டு அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவரின் அலுவலகமாகவும், வசிப்பிடமாகவும், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. அதை மக்கள் அணுகுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன்படி, … Read more

ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்… வைரலான வீடியோவில் அரசியல் களத்தில் பரபரப்பு!

Latest National News: ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் இணைந்து லத்தியால் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கூடங்குளம் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்: திமுக

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தமிழக எரிசக்தி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 25) சிறப்பு கவன உரையாற்றிய அவர், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் நிலைய திட்டங்களைத் துவக்கியுள்ளது. அதேபோன்று, 1320 மெகாவாட் … Read more

புனே மாவட்டத்தில் கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம்: 4 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பாதிப்பு சம்பவங்களால் 4 பேர் உயிரிழந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம், புனே மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் … Read more

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று (ஜூலை 25) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட … Read more

நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இமாச்சல் மாநிலம் மண்டியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

நிதி ஆயோக் கூட்டம் | பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புறக்கணிப்பு – ஆம் ஆத்மி அறிவிப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு … Read more

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டம்: சித்தராமையாவுக்கு நெருக்கடி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் நேற்று (புதன்கிழமை) இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (MUDA) ஊழல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏ.,க்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ.,க்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளிருப்புப் … Read more

மும்பையில் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் சேதத்தை பார்வையிட்டார் கடற்படை தளபதி

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. 3,850 டன் எடையுள்ள இந்தக் கப்பல்கடந்த 2000-வது ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. பழுதுபார்க்கும் பணிக்காக மும்பை கடற்படைதளத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பழுதுபார்க்கும் பணியின் போது இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர். அதன்பின்பு கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் கடற்படை … Read more