கவனம் பெறும் 5-ம் கட்டத் தேர்தல்: உ.பி.யின் 14 தொகுதிகளில் களமிறங்கும் 5 விஐபி வேட்பாளர்கள்

புதுடெல்லி: மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னோவில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதுவரையும் 41 தொகுதிகளில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஐந்தாம் கட்டமாக மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் … Read more

“மம்தாவை நம்பவில்லை” – டிஎம்சியின் ‘வெளியில் இருந்து ஆதரவு’ கருத்துக்கு காங்., எதிர்வினை

கொல்கத்தா: மம்தா பானர்ஜியை தான் நம்பவில்லை என்றும், அவர் பாஜகவை ஆதரிப்பார் என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், திரிணமூல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று கூறி இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அந்த அரசில் திரிணமூல் காங்கிரஸ் … Read more

சீதை பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்: அமித் ஷா உறுதி

சீதாமர்ஹி(பிஹார்): சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார். பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட கோயிலை கட்டும். சீதா தேவிக்கு கோயில் கட்ட, நரேந்திர மோடி மற்றும் பாஜக.,வால் மட்டுமே முடியும். நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் … Read more

கேஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரம்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார்

புதுடெல்லி: தேர்தலில் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தால், தான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருத்ததை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது. “இடைக்கால ஜாமீனில் வெளியாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்?. இது நீதிமன்றத்தை எதிர்ப்பது போன்ற செயல்” என்று அமலாக்கத் துறை தனது வாதத்தில் கடுமையாக சாட்டியுள்ளது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா … Read more

“பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்” – சுவாதி மாலிவால் சர்ச்சை; பிரியங்கா கருத்து

புதுடெல்லி: “எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்” என சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் … Read more

முதல் 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தகவல்: பிரபல கிரிக்கெட் வீரரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதருமான சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். … Read more

இண்டியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே

புவனேஸ்வர்(ஒடிசா): இண்டியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி அவருக்கு ஆதரவளித்து வருகிறார். ஒடிசாவின் முன்னேற்றத்துக்காக அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் நினைத்ததற்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் … Read more

பெண் எம்.பி மீது தாக்குதல்: கேஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள சம்மனில், “எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து இந்த விவகாரத்தை தேசிய மகளிர் … Read more

‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமெதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி

Lok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது. 

“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி

ஆசம்கர்(உத்தரப்பிரதேசம்): குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது குடியுரிமை பெற்றிருப்பவர்கள், நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வந்தவர்கள். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் சிஏஏ … Read more