நீட் வழக்கு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு இடையூறு செய்த மூத்த வழக்கறிஞரை அறையில் இருந்து வெளியேற்றும்படி காவலர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தார். மனுதாரர்களில் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி வாதிடும்போது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, ஹூடா தனது வாதத்தை … Read more

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகு களப் பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் தீபக் பென்டல் மரபணுமாற்றப்பட்ட கடுகை உருவாக்கினார். அதிக மகசூல் தரும் இதை பயிரிட்டால் சமையல் எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், டிஎம்எச்-11 … Read more

கார் பானட்டில் ஸ்பைடர்மேன் உடையில் ஆபத்தான பயணம்: வைரல் வீடியோவால் டெல்லி இளைஞர் கைது

புதுடெல்லி: டெல்லியில் ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டில் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டெல்லி போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் டெல்லியின் துவாரகா பகுதியில் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டின் மேல் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில், தாறுமாறாக வாகனம் … Read more

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருப்பதாக தகவல் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை பின்பற்றப்படுவதாக தகவல் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், “நாடாளுமன்றம் இயற்றிய ‘கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (MS Act, 2013)’, 06.12.2013 முதல் நடைமுறைக்கு … Read more

பிஎம்ஓ பொது குறைதீர்வு தளம் மூலம் பெறப்பட்ட 12,000+ புகார்கள் நிலுவை: மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை தீர்வு தளம் (போர்ட்டல்) மூலமாக பெறப்பட்டவற்றில் 12,000 புகார்கள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய பணியாளர்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: https://www.pmindia.gov.in என்பது மத்திய அமைச்சகம் அல்லது துறைகள் மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தொடர்புடைய பொதுவான குறைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு பொதுவான போர்ட்டலாகும். இந்தப் … Read more

“தமிழக ரயில் திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ல் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட … Read more

சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் வெளியிட்ட தகவல்: 261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 61.74% அளவுக்கு … Read more

சச்சிதானந்தம் எம்.பி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

சென்னை: மகாத்மா காந்தியை கொலை செய்த இயக்கம் என்று ஆர்எஸ்எஸ் என்று அவதூறு பரப்பிய திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்னிந்திய ஊடகத் துறை செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிந்து ஒற்றுமை மூலம் நாட்டு மக்களிடையே தேசபக்தியையும், தெய்வபக்தியையும் தட்டியெழுப்பி தேசிய புனர் அமைப்புப் பணியில் கடந்த 99 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஈடுபட்டு வருகிறது. … Read more

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 5 ஆண்டுகளில் 7.77 லட்சம் பேர் உயிரிழப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் 2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள்: இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை அளித்த தகவல்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) எழுத்துபூர்வமாக தெரிவித்தார். அது குறித்த விவரம்: 2018-ம் ஆண்டில் 1,57,593 பேர், … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறை தரப்பை கேள்விகளால் திணறடித்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: “இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள்” என்று செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் … Read more