அபராதம் கட்ட முடியாமல் சிறையில் வாடும் ஏழைக் கைதிகளுக்கு உதவி: மத்திய பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: தங்களது தவறுக்கான தண்டணைக் காலம் முடிந்தும், அபராதம் கட்ட முடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.20 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. இதற்கான நீதிமன்ற வழக்குகளின் போது அக்கைதிகளுக்கு நீதிபதிகள் தண்டனை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகைகளை அபராதங்களாகவும் விதிப்பது … Read more

“சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கும் மத்திய பட்ஜெட்!” – பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: “வளர்ந்த இந்தியாவுக்கான இந்த பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிப்பதுடன் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது” என்று மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 2024-25-க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: “மத்திய பட்ஜெட் 2024-25, சமூகத்தின் … Read more

இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு … Read more

“பாஜகவின் நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் … Read more

“ஆட்சியை காப்பதற்கான அறிவிப்புகள்” – மத்திய பட்ஜெட் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, “இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பத்தாண்டு கால ஆட்சியின் மறுப்புக்கு பின்னர், உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரோ, அவரது கட்சியினரோ அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை பற்றி குறிப்பிடாத நிலையில் … Read more

சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை! பட்ஜெட் அறிவிப்பின் பின்னணி!

Stamp Duty For Women : சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்..

புதிதாக பணியில் சேருவோருக்கு ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ வழங்கும் 3 திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டங்கள் இபிஎஃப்ஓவில் (EPFO) … Read more

Budget 2024: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன…? யார் யாருக்கு குட் நியூஸ்?

Budget 2024: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம், வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் பருவகால சவால்களை எதிர்கொள்ளுதல் … Read more

மத்திய பட்ஜெட் 2024: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 20 மணி நேரம் பொது விவாதம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது மக்களவை, மாநிலங்களவையில் தலா 20 மணி நேரங்கள் பொது விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில் ரயில்வே, கல்வி, சுகாதாரம்,எம்.எஸ்.எம்.இ. மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகள் பற்றி தனித்தனியாக விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அவைகளில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) திங்கள்கிழமை கூடி, அவையின் நிகழ்ச்சி நிரல்களை இறுதி செய்தது. என்றாலும், … Read more