பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு எதிரொலி: நிதிஷ் பதவி விலக லாலு வலியுறுத்தல்

பாட்னா: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பதவிக்காக, பிஹார் மக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கை விஷயத்தில் நிதிஷ் குமார் சமரசம் செய்து கொண்டுள்ளார். பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது மாநில மக்களின் கோரிக்கை. … Read more

தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதுணை: கலாச்சார அமைச்சர் ஷெகாவத் தகவல்

புதுடெல்லி: தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாக பதில்களை அளித்துள்ளார். அதன் விவரம்: தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 2004 அக்டோபர் 12 அன்று தமிழுக்கும், 2005 நவம்பர் 25 அன்று சமஸ்கிருதத்துக்கும், 2008 … Read more

“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு ஆவேசம்

புதுடெல்லி: “விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தினார். இதுதொடர்பாக இன்று (ஜூலை 22) மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின்போது திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியது: “தேசிய நோய்க் கிருமிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமான நெறிமுறைகளை வகுத்துக் … Read more

நீட் முறைகேடு விவகாரம்: முதல் நாளிலேயே மக்களவையில் காரசார விவாதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. … Read more

14 வயது சிறுவன் உயிரிழப்பு: நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த நிலையில்,வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக அம்மாநில அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறி காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருடைய ரத்த மாதிரி புனே நகரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு … Read more

நிபா வைரஸிற்கு 14 வயது சிறுவன் உயிரிழப்பு! இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 214 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

“நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை” – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

புதுடெல்லி: “நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் என்பதால், இது இந்திய ஜனநாயகத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டுக்காக உழைக்க … Read more

தோல்விக்குப் பிறகும் ஏன் இவ்வளவு அகங்காரம்? – ராகுல் காந்தியை விமர்சித்த அமித் ஷா

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றுஉள்ள இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்ற நிலையில்,ராகுல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனத்தை ராகுல் முன்வைத்து வருகிறார். இந்நிலையில்,ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பொதுவாக தேர்தலில் வென்றகட்சிகள் அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன்.இப்போதுதான் முதன்முறையாகதேர்தலில் தோற்ற கட்சியின் தலைவர் (ராகுல் … Read more

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? பட்ஜெட்டுக்கு முன் அது தாக்கல் செய்யப்படுவது ஏன்?

Economic Survey 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன என்பதை இதில் காணலாம்.

2050-க்குள் முதியோர் எண்ணிக்கை 2 மடங்காகும்; சுகாதார துறையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் – ஐ.நா இந்திய தலைவர் தகவல்

புதுடெல்லி: ‘‘இந்தியாவில் 2050-ம் ஆண்டுக் குள் முதியவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று ஐ.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர் பரிந்துரைத் துள்ளார். உலகளவில் மக்கள் தொகையில் பாலின சமத்துவம், பெண்களின் உடல்நலம், குழந்தை பெறுதல், உரிமைகள் போன்றவற்றுக்காக ஐ.நா. சார்பில் தனி நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் இந்திய தலைவர்ஆண்டிரீயா ஓஜ்னர், பிடிஐ.க்குநேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 60 வயது அல்லது … Read more