நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். புதிய அரசில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு … Read more

அரபிக் கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

மும்பை: பனாமா நாட்டு சரக்கு கப்பல் ‘மார்ஸ்க் ஃபிராங்க்பர்ட்’. கர்நாடகாவின் கர்வார் பகுதியில் இருந்து 17 மைல் தொலைவில், அரபிக் கடலில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலின் முன்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் சாசெட், சுஜீத் மற்றும் சாம்ராட் ஆகியவை அனுப்பப்பட்டன. இந்த … Read more

தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கேஆர்எஸ் அணை நீர்மட்டம் உயர்வு

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருவதால், கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள‌ கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் … Read more

குஜராத்தில் கடும் வெப்பம்: எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ‘ஹராமி நல்லா’ சிற்றோடை பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் இருப்பர். எல்லைப் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் வீரர்கள் தொடர்ந்து ரோந்து சுற்றி வருவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அனல் … Read more

“இந்திய அரசியலில் மிகப்பெரிய ஊழல்வாதி சரத் பவார்” – அமித் ஷா @ புனே

புனே: எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியை கடுமையாக அவர் விமர்சித்தார். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் ராகுல் காந்தியை அவர் விமர்சித்தார். “1993 குண்டுவெடிப்புக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை தழுவிய பிறகும் அதை கொண்டாடுவதை முதல் முறையாக நான் பார்க்கிறேன். இந்த … Read more

விவசாயிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம்: பயிர் கடனை ரூ.5 லட்சமாக உயர்த்த பரிசீலனை

புதுடெல்லி: மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (எம்ஐஎஸ்எஸ்) கீழ் விவசாயிகளின் பயிர்க் கடனை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு பயிர்க் கடன்களை வழங்கி வருகிறது. வட்டி மானியத் திட்டத்தின் கீழ் இந்தப் பயிர்க் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடன் தொகை ரூ.3 லட்சமாக உள்ளது. … Read more

நீட் முதல் கன்வார் சர்ச்சை வரை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விவகாரம் மற்றும் கன்வார் யாத்திரை சர்ச்சை போன்ற பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன. ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய … Read more

“துன்பத்தில் இருப்பவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” – வங்கதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி ஆதரவுக்கரம்

கொல்கத்தா: “துன்பத்தில் இருக்கும் எவரும் எங்கள் கதவை தட்டினால், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” என்று வங்கதேச வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வங்கதேச வன்முறைப் போராட்டத்தில் 151 பேர் உயிரிழந்த நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார். இதுதொடர்பாக மம்தா மேலும் பேசுகையில், “வங்கதேச விவகாரங்கள் குறித்து பேசும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கூட மத்திய அரசால் எடுக்கப்படும். எனினும் … Read more

“கேஜ்ரிவாலை கொலை செய்ய சதி” – பாஜக மீது ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கொலைசெய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் பேசியதாவது: பாஜகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவும், முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சிறையில் அவரை கொல்ல சதி செய்வதாக தெரிகிறது. கேஜ்ரிவாலின் உடல்நிலை … Read more

“பெயரை மறைக்கத் தேவையில்லை” – கன்வார் யாத்திரை சர்ச்சை; ராம்தேவ் கருத்து

புதுடெல்லி: கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உ.பி அரசின் உத்தரவுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, “ஒவ்வொருவரும் தங்கள் பெயர் குறித்து பெருமைப்பட வேண்டும். பெயரை மறைக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் நாளை ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை கன்வர் யாத்திரை எனும் காவடி யாத்திரை தொடங்குகிறது. ஆண்டுதோறும் இந்த புனித யாத்திரையின்போது சட்டம் ஒழுங்கை காப்பது உ.பி. அரசுக்கு சவாலாகி … Read more