உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் … Read more

ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் ரகசிய சுரங்கத்தை அறிய லேசர் ஸ்கேனிங்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறை உள்ளது. இதற்குள் வெளி அறை மற்றும் உள் அறை என இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் பகவான் ஜெகந்நாதருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த ரத்ன பண்டார் கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. ஒடிசா அரசின் உத்தரவின்படி கடந்த 14-ம் தேதி தொல்பொருள் ஆய்வு துறையினர் ரத்ன பண்டாரின் வெளி அறை … Read more

உ.பி காவடி யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகளின் பெயர்களை எழுதி வைக்க உத்தரவு

புதுடெல்லி: வட மாநிலங்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது கன்வர் யாத்ரா எனும் காவடிகள் யாத்திரை. இது இந்த வருடம் ஜுலை 22-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 6-ம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரையானது, ஒவ்வொரு முறையும் உ.பி. அரசுக்கு பெரும் சவாலாகி விடுகிறது. இந்த யாத்திரையினருடன் மோதலால் மதக்கலவரம், சாலை விபத்து உள்ளிட்ட பலவகை பிரச்சினைகள் எழுவது உண்டு. இந்தமுறை காவடி யாத்திரையின் போது உ.பி.யில் 10 சட்டப்பேரவைக்கானத் தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதையும் மனதில் … Read more

கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்புகிறது

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகியஇடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள‌ கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உயர்ந்துள்ளது. அணை முழுவது மாக நிரம்புவதற்கு இன்னும் 4 அடிகளே இருப்ப தால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் … Read more

என்னை கொல்ல சதி நடக்கிறது: ஒவைசி எம்.பி. குற்றச்சாட்டு

ஹைதராபாத்: என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி செய்தியாளர் களிடம் பேசியதாவது: முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் பழி வாங்கும் தோரணையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. டெல்லியில் உள்ள எனது வீட்டில் அடிக்கடி சோதனை … Read more

கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி … Read more

“ராகுல் காந்தி, இண்டியா கூட்டணியினர் ஆணவம் காட்டுகின்றனர்” – அமித் ஷா பேச்சு

ராஞ்சி: பழங்குடியினரின் நிலங்கள், உரிமைகளை பாதுகாக்க ஜார்க்கண்டில் மக்கள் தொகை குறித்த வெள்ளை அறிக்கையை பாஜக வெளியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், “ராகுல் காந்தி, இண்டியா கூட்டணியினர் ஆணவத்தைக் காட்டுகின்றனர்” என்று அவர் சாடினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 81 சட்டமன்றத் தொகுதிகளில் 52 தொகுதிகளில் … Read more

ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்

Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

கூந்தலை வெட்டி பெண்ணுக்கு தண்டனை: மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பாஜக கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டிபெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின்தலைமுடியை ஆண் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி அகற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.இதனை பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இம்முறை ஹவுராவின் டோம்ஜூரில் இச்சம்பவம் நடந்துள்ளது. டோம்ஜூர் தொலைதூரப் பகுதி அல்ல. … Read more

தொடரும் கனமழையில் மும்பை தத்தளிப்பு; பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மும்பையின் மத்திய பகுதியில் சராசரியாக 78 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு மும்பையில் முறையே 57 மிமீ மற்றும் 67 மிமீ … Read more