‘‘விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது’’ – மைக்ரோசாப்ட் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: “விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாலை 3 மணி முதல், விமான நிலையங்களில் விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. நேற்று ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பின்னடைவுகள் உள்ளன. அவை … Read more

எக்ஸ்-ல் 10 கோடி ஃபாலோயர்கள்; பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் … Read more

UPSC தலைவர் திடீர் ராஜினாமா… பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா…?

UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா?- ஆன்மிக சேவையில் ஈடுபட இருப்பதாக தகவல்

புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினராக இணைந்த மனோஜ் சோனி, 2023ம் ஆண்டு மே.16-ல் அவ்வாணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடன் சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது … Read more

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: அமெரிக்க ராணுவத் தளவாட நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,“பிரதமர் நரேந்திர மோடியை லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் சந்தித்து பேசினார். இந்தியா –அமெரிக்கா இடையிலான விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்தியாவில் … Read more

வங்கதேச போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கண்டெடுப்பு

புதுடெல்லி: திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டம் ரான்குடியா பகுதியில் நேற்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. தகவல் அறிந்து வந்த போலீஸார் பள்ளத்தில் இருந்து மொத்தம் 27 வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர். அவை 1971 வங்கதேசப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எனத் தெரிகிறது. வங்கதேச சுதந்திரப் போராட்ட முக்தி பாஹிணி அமைப்பினர் இந்த வெடிகுண்டுகளை இங்கு புதைத்து வைத்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி அனந்த தாஸ்கூறும்போது, … Read more

மாவோயிஸ்ட்டுகள் பற்றி தகவல் அளித்தவருக்கு ரூ.86 லட்சம் பரிசு

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் ‘மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த தேடப்படும் மாவோயிஸ்ட்டுகள் 12 பேரை கடந்த புதன்கிழமை என்கவுன்ட்டரில் கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட கமாண்டோ பிரிவினருக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் ஈடுபட் டுள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் சரியான நேரத்தில் … Read more

“ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கவே மத்திய பட்ஜெட்” – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் நோக்கிலேயே பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன், சில தொழிலதிபர்கள், வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளை சந்தித்து அவர் கலந்துரையாடினார். ஆனால், மூன்று வேளையும் சாப்பிட … Read more

உ.பி. விரைவு ரயில் விபத்து உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு: 32 பேர் காயம்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா அருகே சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர். சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா … Read more

பில்கிஸ் பானு வழக்கில் ஜாமீன் கோரிய இருவரின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. 2022 ஆகஸ்ட் 15ல் அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த … Read more