பெங்களூரு கனமழை: குளமான சாலைகள்; போக்குவரத்து நெரிசல் – விமான சேவை பாதிப்பு

பெங்களூரு: இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்த மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையின் படி வியாழக்கிழமை அன்று கர்நாடகத்தின் பெங்களூருவில் கனமழை பதிவானது. மழை காரணமாக நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. மழையினால் பெங்களூரு நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததும் இதற்கு காரணம். போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் விதமாக … Read more

தேர்தல் விவாதத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, ராகுலுக்கு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின்போது இதுவரை இல்லாத வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் … Read more

சந்தேஷ்காலியில் பாலியல் புகாரை வாபஸ் பெற்ற பெண்: வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு

கொல்கத்தா: சந்தேஷ்காலியில் மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் புகார் கொடுத்ததாகவும், தற்போது அந்த பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்றதாகவும் பெண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் அங்குள்ள பெண்களின் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர். இந்தவிவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் … Read more

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சியும் உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மாற்ற முடியாது என மக்கள் நினைத்தார்கள். அப்போது இருந்த அரசியல் அவ்வாறு நினைக்க வைத்தது. ஆனால், தற்போது நாம் அதை மாற்றிய பிறகு, காஷ்மீரின் ஒட்டுமொத்த நிலவரமும் மாறிவிட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மீண்டும் இந்தியாவிடம் வரவேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் உறுதிப்பாடு. இது … Read more

தேர்தல் பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை அல்ல: கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் தர ஈ.டி. எதிர்ப்பு

புதுடெல்லி: தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமை அல்ல. பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசிய தலைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை’’ என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை (ஈ.டி) தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று உத்தரவு பிறக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. சட்டப்படியான உரிமை இல்லை: இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் … Read more

“கங்கனாவுக்கு இமாச்சல் பற்றி எதுவுமே தெரியவில்லை” – மண்டி காங். வேட்பாளர் விமர்சனம்

புதுடெல்லி: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்தவொரு அறிவும் இல்லை என மண்டி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் விமர்சனம் செய்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங்கும் போட்டியிடுகின்றனர். இதனிடையே பாஜக வெற்றி பெற்றால் மண்டியில் விமான நிலையம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் கங்கனா . இது குறித்து விக்ரமாதித்ய சிங், … Read more

‘இந்தியாவில் 1950 – 2015 காலத்தில் இந்து மக்கள்தொகை 7.8% சரிவு; முஸ்லிம்கள் 43.15% உயர்வு’

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1950-க்கும், 2015-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. மதச் சிறுபான்மையினரின் பங்கு – ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015) என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஷாமிகா ரவி தலைமையிலான இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 1950 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதேசமயம் … Read more

“பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மறந்து மோடி செயல்படுகிறார்” – பிரியங்கா காந்தி தாக்கு

புதுடெல்லி: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக பொய்களை பரப்பி வருகிறது. பிரதமர் மோடி தனது பதவியின் கண்ணியத்தை மறந்து செயல்பட்டு வருகிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது சகோதரரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பேசிய பிரியங்கா காந்தி, “தேர்தல் சமயத்தில் தொலைக்காட்சிகளில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம் பேசப்படுகின்றன. ‘என்றாவது ஒரு நாள் காங்கிரஸ் கட்சி உங்கள் எருமையைத் திருடப் போகிறது, காங்கிரஸ் … Read more

“ஆக.15 முதல் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையைத் தொடங்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி வியாழக்கிழமை நாட்டின் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியில் பேசியிருக்கும் அதில் ராகுல் கூறியது: “தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை உணர்ந்திருக்கும் பிரதமர் மோடி நமது கவனத்தை … Read more

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாது: மாலத்தீவு

புதுடெல்லி: பிரதமர் மோடியை அமைச்சர் ஒருவர் அவதூறாகப் பேசியது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள மூசா ஜமீர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு நல்ல பயணம். நானும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கரும் மிகவும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். இந்திய அரசாங்கத்திற்கும், வெளியுறவுத் … Read more