“கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி … Read more

பழனிசாமிக்கு கவனம் முழுக்க முழுக்க 'பெட்டி' மீதுதான் உள்ளது.. கே.என். நேரு தாக்கு

KN Nehru slams eps: அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். 

ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? – சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்

திருநெல்வேலி: ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். அதிமுக சின்னத்தை எதிர்த்து கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சட்டப் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

கடத்தல் வழக்கு: ஏடிஜிபி-ஐ கைது… பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Minor Boy Kidnap Case: சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். 

பூவை ஜெகன்மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு

சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் … Read more

அடிப்படை அறிவு கூட இல்லையா? இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Minister Sivashankar slams eps: காவல்துறை விசாரணை குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாமலா எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பொறுப்பு வகித்தார் என அமைச்சர் சிவசங்கர் சரமாரியாக விமர்சித்து உள்ளார். 

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழி பெயர்ப் பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார். முன்னாள் … Read more

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பில்லூர் அணை நிரம்பியது. அணையின் உபரி நீர் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றினை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டுள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க அளவு … Read more

விஜய் பெரிய கொம்பனா? வேல்முருகன் மீண்டும் கடுமையான சாடல்!

தன் சம்பாத்தியத்தை செலவு செய்யும் துணை நடிகர் பாலா சூட்டிங் நடத்துவதில்லை. அதேபோல சூர்யா, லாரன்ஸ் அவர்களை ஒப்பிட்டு மீண்டும் விஜய் குறித்து பேசிய தவாக வேல்முருகன். 

சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை தியாகராயநகரில் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் வரும் ஜூன் 26-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட … Read more