“திருமாவளவன் திருமணம் செய்யாமல் இருப்பதில் வருத்தம்” – ராமதாஸ் நெகிழ்ச்சிப் பகிர்வு!

சென்னை: பாமகவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்கு ஆதரவான கருத்துக்களை கூறிய திருமாவளவனுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: “திருமாவளவன் மீது எப்போதும் நான் பாசமாக இருப்பேன். இன்றைக்கும் என்றைக்கும் அவர் மீது எனக்கு பாசம் உண்டு. அவரும் என் மீது பாசமாக இருந்தார், இருப்பார். எனது ஒரே வருத்தம் என்னவென்றால், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திருமாவளவன் … Read more

பாமக பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணமா? – அன்புமணிக்கு ராமதாஸ் மறுப்பு

சென்னை: “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோரை நலம் விசாரிக்க கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 19) சென்னை வந்தார். அப்போது அவரிடம், பாமக பிரச்சினையில் திமுக தலையிடுகிறது என அன்புமணி விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், … Read more

செல்பி கேட்ட தம்பதி.. உடனே திருநீரை அழித்த திருமாவளவன்.. மதுரையில் நடந்தது என்ன?

மதுரையில் திருமாவளவனிடம் தம்பதி செல்பி கேட்ட நிலையில், அவர் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்தார். 

“திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது” – திருமாவளவன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து … Read more

இலவச வீட்டுமனை பட்டா : நாமக்கல், கரூர் மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்

Tamil Nadu Government free house site patta : கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 1400 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் கூடுதல் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் முசிறி ஆர்டிஓ மரணம்: ரூ.1 கோடி காப்பீடு, ரூ.15 லட்சம் நிதி வழங்க முதல்வர் நடவடிக்கை

சென்னை: திருச்சி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்; அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், … Read more

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா? மின் கட்டணம் உயருமா? மின்சாரத்துறை முக்கிய விளக்கம்

Tamil Nadu electricity update : தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா? மின் கட்டணம் உயருமா? என்பது குறித்து மின்வாரிய இயக்குனர் ராதாகிருஷ்ணன் முக்கிய விளக்கம் கொடுத்துள்ளார்.

‘வியக்கத்தக்க கத்திப்பாரா மெட்ரோ மேம்பாலப் பணிகள்’ – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “இன்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் கத்திப்பாரா மேம்பாலம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். Engineering Marvel என … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் அலர்ட்

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சுங்கச்சாவடி ஆண்டுக் கட்டணத்தை ரூ.1,500-ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. … Read more