வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி

Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 20 சதவீதம், 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த,சம்பள நிலுவையை வழங்க ரூ.63.61கோடி முன்பண கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் … Read more

கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அண்ணா பல்கலை. தீவிர நடவடிக்கை

சென்னை: சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த மாணவர்கள், சக மாணவரை ராகிங்செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ராகிங் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அண்ணாபல்கலைக்கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, … Read more

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்!

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகர் சென்னை … Read more

2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்

சென்னை: வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட … Read more

வட மாநில தொழிலாளர் விவகாரம்: பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் மனிஷ்காஷ்யப். இவர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் அதிகாரிகள் தமிழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மனிஷ் … Read more

கரூர் மாநகர திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்வு

கரூர்: கரூர் மாநகர ஏசி திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரூர் மாநகரில் 3 திரையரங்க வளாகங்களில் தலா இரு திரையரங்குகள் என 6, இரு தனி திரையரங்கம் என மொத்தம் 8 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 7 ஏசி திரையரங்குகளாகும். இவற்றில் இதுவரை ரூ.130 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர்கள் மற்றும் பிரமாண்ட படங்கள் வெளியாகும் போது ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் … Read more

தீபாவளி | கோவை – திண்டுக்கல் இடையே நவ.14 வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே வரும் 14-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை (நவ.11) முதல் வரும் 14-ம் தேதி வரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து காலை 9.20 … Read more

பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளிடம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ‘நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் 1.5 முதல் 5 சதவீத பணம் செலுத்தினால் போதும். நாடு முழுவதும் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் … Read more

' அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பிறகுதான்…’ – உயர் நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு … Read more