மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயில் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் (டான்சி) பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா (குடமுழுக்கு) இன்று (8-ம் தேதி) தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு யாகங்கள், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், கும்பாலாரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை (9-ம் தேதி) … Read more

உசிலம்பட்டி, திருமங்கலம் விவசாயிகள் நலனுக்காக வைகை நீரைத் திறக்க வேண்டும்: வைகோ

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்கென வைகை அணை நீரைத் திறக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதியில் போதிய மழையின்றி இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200-க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். … Read more

“அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்” – செல்லூர் ராஜு பாராட்டு

மதுரை: “இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மதுரையில் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் மழை … Read more

தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் – முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த ஜி.ராமகிருஷ்ணன், சாலமன் பாப்பையா

மதுரை: மதுரையில் இன்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறனை, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தற்போதைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன், சிறு விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை கலைநகரிலுள்ள வீட்டில் ஓய்வு பெற்றுவருகிறார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் குருபூஜையையொட்டி மதுரைக்கு வருகைந்தபோது, அவரது இல்லத்துக்கு சென்று நலம் … Read more

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக TANTEA-க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களில் ஒருவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் நியமனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரின் மனைவி உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே 23-ம் தேதி உயிரிழந்தார். அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக … Read more

''ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது'' – சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை மறுத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் உள்ளிட்ட 20 பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி இருப்பது … Read more

''அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பங்கேற்கிறார்கள்'': திருமாவளவன்

கடலூர்: அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பங்கேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம் பி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.8)சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகவும் இந்த தேர்தலில் கட்சிக்கு கூடுதல் இடங்கள் … Read more

’ஆட்சிக்கு வந்தா தானே’ அண்ணாமலைக்கு கனிமொழி சுடச்சுட பதிலடி

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை கலைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.