கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள்: தங்கம் தென்னரசு தகவல்

ராஜபாளையம்: கீழடி மற்றும் வெம்பக்கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொல்லியல் துறை சார்பில் மாநில அளவிலான தொல்லியல் மற்றும் வரலாறு குறித்த இரு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். ‘வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்’ என்ற தலைப்பில் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு … Read more

பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் – ஆர்எஸ் பாரதி

திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.   

ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய பிடிஓ-க்களுக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: கிராம ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (பிடிஓ) அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் பள்ளித்தம்மன் ஊராட்சித் தலைவர் சண்முகபிரியா, மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ஊராட்சி செயலர்கள் ஊராட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எழுத்தர்கள் இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஊராட்சி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. … Read more

ஏற்காட்டில் மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் நோயாளியை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

சேலம்: ஏற்காட்டில் உள்ள கொடிகாடு மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடிக்கிறது. மலைக்கிராம மக்களின் சோக வாழ்க்கையை மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இங்கு 40 குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்துவரும் அண்ணாமலை என்பவர் முதுமை … Read more

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் … Read more

மதுரையில் விசிறி தாத்தா காலமானார்

மதுரை: மதுரையில் உள்ள கோயில்களில் அர்ப்பணிப் போடு பக்தர்கள் மனம் குளிரும் வகையில் விசிறி வீசி ஆன்மிகச் சேவையாற்றிய ‘விசிறி தாத்தா’ சுந்தர ராஜ மூர்த்தி (87) வயது மூப்பால் காலமானார். மதுரை திருநகர் மாணிக்க நகரைச் சேர்ந்தவர் சோ.ரெ.சுந்தர ராஜமூர்த்தி. சீதாலெட்சுமி நூற்பாலை ஊழி யரான இவர், வேண்டுதல் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்குச் சென்று விசிறி வீசி வருகிறார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோவில் கள்ளழகர் … Read more

அமைதியாக முடிந்த தேவர் குருபூஜை விழா: பொதுமக்களுக்கு தென்மண்டல ஐஜி நன்றி

ராமநாதபுரம்: பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொது மக்களுக்கு தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் நன்றி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவாின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குரு பூஜை விழா அக். 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. அக்.30 அன்று தேவர் நினைவிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் … Read more

டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு  இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது-  தமிழக போக்குவரத்து துறை தகவல்

புதுச்சேரி உள்துறை அமைச்சருக்கு‘வளர்ச்சி முதல்வர்’ என வரவேற்பு பதாகை – என்.ஆர். காங். கட்சியினர் அதிருப்தி

காரைக்கால்: காரைக்காலில் இன்று (நவ.1) நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவுக்கு, வருகை தரும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் ‘வளர்ச்சி முதல்வர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஆளும் என்.ஆர்.காங் கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சியான பாஜக இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில், காரைக்காலில் இன்று (நவ.1) நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் … Read more

உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கடலூர்: சிதம்பரம் வேங்கான் தெருவில் குரு நமச்சிவாயர் மடத்துக்கு சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்ம நாதர், யோகாம்பாள், குரு நமச்சிவாயர், மாணிக்க வாசகர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்து, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து … Read more